Tuesday, December 9, 2008

JOKES

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா”
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
”கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
-----------------------------------------
சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
----------------------------------------------------
என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
----------------------------------------------------
ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பாபிறந்தது. அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க.

இரண்டவதுகுழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்-சிங்”குன்னு பேர் வச்சாங்க.

ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரிகறுப்பா பிறந்தது.

அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க?

"தெரியலையே””

சம்- திங்-ராங்”குன்னு.
----------------------------------------------------------
"நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”

”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்”
----------------------------------------------------------
ஒரு காப்பி எவ்வளவு சார் ?

5 ரூபாய்.

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?

டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
------------------------------------------------------------
டாக்டர் : நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?
--------------------------------------------------------------
அப்பா 5 + 5 எவ்வளவு?

மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா?
சரி, சரி அந்தகால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.
-----------------------------------------------------------
இன்பத்திலும் சிரி,துன்பத்திலும் சிரி,சிரிச்சுக்கிட்டே இரு

அப்பதான் நீ லூசுன்னுஎல்லாரும் நம்புவாங்க………
-------------------------------------------------------------
காலிஃ பிளவரை’ தலையில் வைக்க முடியாது
எலக்ட்ரி’ சிட்டி’யில் தங்க முடியாது
கள்ளிப்’ பாலில்’ காபி போட முடியாது
கோல’ மாவில்’ பூரி போட முடியாது
கோல்டு’ பில்டரை அடகு வைக்க முடியாது - இது மாதிரிஉன்னையும் குளிக்க வைக்க முடியாது!
-குளிக்கும்போது யோசிப்போர் சங்கம்
---------------------------------------------------------
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?
Intel insideMental outside !!!
- மல்லுக்கட்டி யோசிப்போர் சங்கம்
---------------------------------------------------------
நண்பா உன் எதிர்காலம்நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால…
சீக்கிரமா தூங்கப் போடா கண்ணு!
-----------------------------------------------------------
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா???..
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !!!
----------------------------------------------------------
என்னதான் கராத்தேல பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா ஓடத்தான் செய்யணும்!

வாழை மரம்‘தார்’ போடும்
ஆனால் அதை வச்சுநம்மால‘ரோடு’ போட முடியாதே!

நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,
ஆனால், அதாலலோக்கல் கால்,எஸ்.டி. டி.கால்,ஐ.எஸ்.டி. கால் ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.
- விஞ்ஞானரீதியா யோசிப்போர் சங்கம்
-------------------------------------------------------------
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க
பஸ்ல காசுக் கொடுக்கலன்னா பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
- கஷ்டப்பட்டு யோசிப்போர் சங்கம்
--------------------------------------------------------------
டாக்டர் உங்களைச் சந்திக்கனும் நீங்க எப்ப “FREE”
எப்ப வந்தாலும் நான் “FREE” இல்ல “பீஸ்” வாங்குவேன்
---------------------------------------------------------------
அரண்மனைக்குள்ளே அடிக்கடி சரிங்சு விழுந்து காயம் பண்ணிக்கிறீங்களே மன்னா!
அதற்காக நீங்கள் கொற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு’னு பாட்டெழுதுற்தா?!
------------------------------------------------------------------
என்ன சார், நீங்க யூனிவர்சிட்டியில வேலை செய்யறதா சொன்னீங்க. ஆனா வீட்டுல சமையல் செய்துட்டிருக்கீங்க?

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு உங்களுக்கு தெரியாதா…?!
-------------------------------------------------------------------
தண்டோரா போடுபவனை மன்னர் ஏன் தண்டிக்கிறாரு?

இளவரசியை அடக்குபவருக்கு காளை பரிசு’ன்னு மாற்றிச் சொல்லிட்டானாம்!!
-------------------------------------------------------------------

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.

நீங்க கேட்டீங்களா?

இல்லை அவங்களே சொன்னங்க…
----------------------------------------------------------------------
என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போது இளிச்சவாயன்தான்.
-----------------------------------------------------------------------
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
-------------------------------------------------------------------------

Thursday, November 27, 2008

இன்று

தேச பாதுகாப்புக்காக கொண்டு வந்த பொடா சட்டத்தை சொந்த விருப்பு வெறுப்புக்காக பயன்படுத்திய ஜெயலலிதா ஒருபுறம்
தேசிய பாதுகாப்பு சட்டத்தை நேற்று கேலி கூத்தாக்கிய கருணாநிதி ஒருபுறம்
ஒரு மத்திய அமைச்சர் மகளை விடுவிக்க பத்து தீவிரவாதிகளை விடுவித்த காங்கிரஸ் கட்சியினரின் தேச பற்று ஒருபுறம்
இந்திய கடல் எல்லையை பாதுகாக்காமல் சோமாலிய கடல் கொள்ளையரை பிடிக்க கடற்படையை அனுப்பும் மத்திய அரசு
ஒருபுறம்
ஐந்து கோடி லஞ்சம் தந்து திகார் சிறையில் இருந்து பீகார் சிறைக்கு மாறி உல்லாசம் அனுபவிக்கும் பப்பு யாதவை தேர்ந்தெடுக்கும் நமது கேடுகெட்ட அரசியல் சாசனம் மறுபுறம்
ஒவ்வொரு நாளும் நமது நாட்டை உயர்வாக பேசி பேசி இன்று பிற நாட்டவரின் துக்க விசாரிப்பிற்கும் ஏளன பார்வைக்கும் ஆளாகி நிற்கும் நம் நிலையை கண்டால் நின்று விடவா என இதயம் கேட்கிறது. கண்களில் நீர் துளிர்கிறது. என் இதயம் நிறைந்த இந்தியா இன்று எங்கே செல்கிறது?

Tuesday, November 25, 2008

தினந்தோறும்....

தினந்தோறும் தீபாவளிதான்
வெடிச்சத்தமில்லாமல் விடியாதெங்கள் காலை

நரகாசுரர்களும் ராவணர்களும்
குறிபார்த்தடிப்பது சில சிறு விதைகளைதான்
அவர்களுக்குத்தெரியும் நாங்கள் விருட்சமாவோம் என

செஞ்சோலையில் வெடித்ததில் சிதறியதெல்லாம்
இளம் ரோஜாக்கள்
ஏ கடவுகளர்களே இன்னுமா அதர்மம் வேண்டும் நீங்கள்
வந்துசேர- உயிர்த்தெழ...

ஏ மா மனிதர்களே
என்றைக்கேனும் நீ்ங்கள் மரணபயத்தோடு எழுந்திருக்கிறீ்ர்களா?
உங்கள் விரல்கள் நடுங்க- போர்த்தப்பட்ட பிணக்குவியல்களில்
உறவுகளை தேடியிருக்கவாய்த்ததா?
நாங்கள் தினமும் இதைதான் செய்கிறோம்...

எங்களுக்கு விட்டுப்போவதற்கென ஓர் வரலாறு இருக்கிறது
நாளைய எனதுபிணத்தின்மீது நடந்துபோகப்போகும்
கழுகுகளே உங்களுக்கு இரண்டு வாய்ப்பு

ஒன்று இதை ஒரு சாட்சியாய் நின்று பார்த்திருப்பது
அல்லது
ஓரினம் அழிக்கப்படுவதை எதிர்த்து ஓர் குரலாவது கொடுப்து

எது செய்தாலும் சம்மதமே....

-ரிஷி

Friday, October 24, 2008

கடிதம்!

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது..
)

நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்.... அதனால் தான் எழுதவில்லை.......

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப் பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது..... அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?

இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.....

மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்தபோது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்றுதான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் 'சார்க்' கூட்டாளியின் கொடிய முகம் கண்டபோதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம்விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே? அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் என் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்....

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை..... எனக்கு....

அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும்கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,

இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத்தமிழர்களே........

ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்

- ஈழத் தமிழன்

Thursday, October 16, 2008

My Mother - Embodiment of Love

By : Dr. A.P.J Abdul Kalam ,People's President of India

During the II world war in 1941, it was a difficult time for our family at Rameswaram. I was a ten year old boy then. War had almost reached our doors of Rameswaram since the cloud of war had already reached Colombo. Almost everything was a rarity from food articles to anything. Ours was a large joint family. The size of our family was five sons and five daughters and three of whom had families. I used to see in my house anytime three cradles. My grandmother and mother were almost managing this large contingent. The environment in the home alternated by happiness and sadness. I used to get up at four in the morning, take bath and went to my teacher Swamiyar for learning mathematics. He will not accept students if they had not taken bath. He was a unique mathematics teacher and he used to take only five students for free tuition in a year. My mother used to get up before me, and gave bath to me and prepared me to go for the tuition. I use to comeback at 5:30 when my father would be waiting for taking me to the Namaz and Koran Sharif learning in Arabic school. After that I used to go to Rameswaram Road Railway station, three kilometers away to collect newspaper. Madras Dhanushkodi Mail will pass through the station but will not stop, since it was war time. The newspaper bundle will be thrown from the running train to the platform.

I used to collect the paper and run around the Rameswaram town and be the first one to distribute the newspapers in the town. My elder cousin brother was the agent who went away to Sri Lanka in search of better livelihood. After distribution, I used to come home at 8 AM. My mother will give me a simple breakfast with a special quota compared to other children because I was studying and working simultaneously. After the school gets over in the evening, again I will go around Rameswaran for collection of dues from customers. I still remember an incident which I would like to share with you. As a young boy I was walking, running and studying all together. One day, when all my brothers and sisters were sitting and eating, my mother went on giving me chapattis (even though we are rice eaters only, wheat was rationed). When I finished eating, my elder brother called me privately and scolded “Kalam do you know what was happening? You went on eating Chappati, and mother went on giving you. She has given all her chappatis to you. It is difficult time. Be a responsible son and do not make your mother starve”. First time I had a shivering sensation and I could not control myself. I rushed to my mother and hugged her. Even though I was studying in 5th class, I had a special place in my home because I was the last guy in the family. There used to be no electricity. Our house was lit by the kerosene lamp that too between 7 to 9 PM. My mother specially gave me a small kerosene lamp so that I can study up to 11 PM. I still remember my mother in a full moon night which has been portrayed with the title “mother” in my book “Wings of Fire”.

Mother
“I still remember the day when I was ten,
Sleeping on your lap to the envy of my elder brothers and sisters.
It was full moon night, my world only you knew Mother!, My Mother!
When at midnight, I woke with tears falling on my knee
You knew the pain of your child, My Mother.
Your caring hands, tenderly removing the pain
Your love, your care, your faith gave me strength,
To face the world without fear and with His strength.
We will meet again on the great Judgment Day. My Mother!"

This is the story of my mother who lived ninety three years, a woman of love, a woman of kindness and above all a woman of divine nature. My mother performed Namaz five times everyday. During Namaz, my mother always looked angelic. Every time I saw her during Namaz I was inspired and moved.

Monday, October 13, 2008

Nokia N-Series Complete Model Line-Up

http://i2.photobucket.com/albums/y20...Collection.jpg

Nokia N-Series
See New. Hear New. Feel New

1.) Nokia N70
- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 Megapixel VGA Camera w/ 4x Digital Zoom
- 30 MB Onboard phone memory
- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Block w/ Sliding Rear Camera Cover
- Bluetooth, USB
- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)
- Dimensions : Length - 109mm, Width - 53mm, Thickness - 21.8mm
- Weight - 126g
- w/ FM Radio

2.) Nokia N71
- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 Megapixel VGA Camera w/ 4x Digital Zoom
- 10 MB Onboard phone memory
- Hot swap Mini SD Slot expandable up to 2 GB
- GSM 800/900/1800/1900 Quadband
- Form Factor - Clam Shell
- Infrared, Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (96 x 68 Pixels)
- Dimensions : Length - 98.6mm, Width - 51.4mm, Thickness - 25.8mm
- Weight - 135g
- w/ FM Radio

3.) Nokia N72
- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash
- 20 MB Onboard phone memory
- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Block
- Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (176 x 208 Pixels)
- Dimensions : Length - 109mm, Width - 53mm, Thickness - 18mm
- Weight - 124g
- w/ FM Radio

4.) Nokia N73
- 3.2 Megapixel Camera (Carl Zeiss Optics Tessar 2.6/5.8 Autofocus) w/ 3x Optical Zoom (Image and Video) w/ built-in flash, 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom
- 42 MB Onboard phone memory
- Hot swap Mini SD Slot expandable up to 2 GB
- GSM 800/900/1800/1900 Quadband
- Form Factor - Block w/ Sliding Rear Camera Cover
- Infrared, Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels)
- Dimensions : Length - 110mm, Width - 49mm, Thickness - 19mm
- Weight - 116g
- w/ FM Radio

5.) Nokia N80
- 3 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 VGA Megapixel Camera w/ 4x Digital Zoom
- 40 MB Onboard phone memory
- Hot swap Mini SD Slot expandable up to 2 GB
- GSM 800/900/1800/1900 Quadband, WCDMA 2100
- Form Factor - Slide
- Infrared, Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (352 x 416 Pixels).
- Dimensions : Length - 95mm, Width - 50mm, Thickness - 26mm
- Weight - 134g
- w/ FM Radio

6.) Nokia N90
- 2 Megapixel Camera (Carl Zeiss Optics Tessar 2.9/5.5 Autofocus) w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash
- 30 MB Onboard phone memory
- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Clam Shell w/ Rotating Screen and Rotating Camera Module
- Bluetooth, USB
- Internal Display Colors (262k Colors), Internal Display Size (352 x 416 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 128 Pixels)
- Dimensions : Length - 112mm, Width - 51mm, Thickness - 24mm
- Weight - 173g
- w/o FM Radio

7.) Nokia N91 GSM
- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video)
- 30 MB Onboard phone memory
- 4 GB Dynamic Hard Drive (Fixed)
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Block w/ Sliding Music Pads
- Bluetooth, USB
- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)
- Dimensions : Length - 113.1mm, Width - 55.2mm, Thickness - 22mm
- Weight - 160g
- w/ FM Radio

8.) Nokia N91 WCDMA
- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video)
- 30 MB Onboard phone memory
- 4 GB Dynamic Hard Drive (Fixed)
- EGSM 900/1800/1900 Triband, WCDMA 2100
- Form Factor - Block w/ Sliding Music Pads
- Bluetooth, USB
- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)
- Dimensions : Length - 113.1mm, Width - 55.2mm, Thickness - 22mm
- Weight - 160g
- w/ FM Radio

9.) Nokia N92
- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video), 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom
- 90 MB Onboard phone memory
- Hot Swap DV Mini SD Slot expandable up to 2 GB
- EGSM 900/1800/1900 Triband
- Form Factor - Clamshell w/ Rotating Screen
- Bluetooth, USB
- Internal Display Colors (16M Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 36 Pixels)
- Dimensions : Length - 107mm, Width - 58.2mm, Thickness - 24.8mm
- Weight - 191g
- w/ FM Radio
- DVB-H TV Broadcast Receiver

10.) Nokia N93
- 3.2 Megapixel Camera (Carl Zeiss Optics Vario-Tessar 3.3/4.5-12.4 Autofocus) w/ 3x Optical Zoom and 20x Digital Zoom (Image and Video) w/ built-in flash, 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom
- 50 MB Onboard phone memory
- Hot swap Mini SD Slot expandable up to 2 GB
- GSM 900/1800/1900 Triband
- Form Factor - Clam Shell w/ Rotating Screen
- Bluetooth, USB
- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 36 Pixels)
- Dimensions : Length - 118mm, Width - 55.5mm, Thickness - 28.2mm
- Weight - 180g
- w/ FM Radio


N-Series phones weaknesess

1.) Nokia N70
- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)
- Nearly identical to Nokia 6680
- Still bears the same Symbian Series 60 8.1 platform of Nokia 6630, Nokia 6680 etc.
- Main Camera without Autofocus

2.) Nokia N71
- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)
- Ugly external design (when folded)
- Main Camera without Autofocus

3.) Nokia N72
- The most basic Nokia N-Series
- Only bears 2 Megapixel Camera
- Non-3G

4.) Nokia N73
- Design not impressive
- Carl Zeiss optics not Vario Tessar

5.) Nokia N80
- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)
- Ugly design very identical to Nokia's Old 7650
- Main Camera without Autofocus

6.) Nokia N90
- Heavy and Bulky
- Accidentally twisting camera module when inside a pocket
- Camera very hard to use for Left Handed
- Still bears the same Symbian Series 60 8.1 platform of Nokia 6630, Nokia 6680 etc.
- No FM Radio
- Fast discharging BL-5B Battery

7.) Nokia N91 GSM and Nokia N91 WCDMA
- Large Block
- Keypads is irritating to use when music keypads is in slide down
- Camera without Built-in Flash
- Camera without Autofocus
- No Hot Swap memory card slot
- Dedicated to music and forgot to focus on Quality camera pictures and brilliant display colors and pixels
- You have to face the Main Camera to you in making video calls

8.) Nokia N92
- Very Heavy
- 2 Megapixel camera only
- Poor photo and video quality (Front 0.3 Megapixel CIF Camera)
- Dedicated to mobile tv and forgot to focus on Quality camera pictures
- Very Small and Useless External Screen

9.) Nokia N93
- Heavy and Bulky
- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)
- Design nearly identical to Nokia's N90
- Very Small and Useless External Screen

N-Series phones advantages

1.) Nokia N70
- Small block form factor means a firm grip
- Designed to both Male and Female

2.) Nokia N71
- Modern Design
- Slightly smaller than bulky N90

3.) Nokia N72
- The cheapest Nokia N-Series to hit the market
- Designed for the Youth Cellular Phone Users

4.) Nokia N73
- 3.2 Megapixel Camera w/ Carl Zeiss Tessar 2.6/5.8 Autofocus
- Quality pictures and videos almost similar to Top Range N93

5.) Nokia N80
- Unique 3 Megapixel camera for excellent image and video capturing
- GSM 800/900/1800/1900 Quadband Global Roaming
- The only Nokia phone with a 3 Megapixel Camera

6.) Nokia N90
- Carl Zeiss Optics for brilliant picture and video quality
- Unique clamshell form with rotating screen and twisting camera module
- First Mobile Phone to have a Carl Zeiss Optics

7.) Nokia N91 GSM
- 4 GB Fixed Hard Drive memory for Imaged, Sounds, and Videos
- Unique dedicated music keypads
- World's Largest capacity hard drive in a Mobile Phone

8.) Nokia N91 WCDMA
- 4 GB Fixed Hard Drive memory for Imaged, Sounds, and Videos
- Unique dedicated music keypads
- World's Largest capacity hard drive in a Mobile Phone
- WCDMA 2100

9.) Nokia N92
- Unique Mobile TV
- 16 Million Internal Display Colors
- World's First Mobile Phone to offer DVB-H TV Broadcast Receiver
- Unique clamshell form with rotating screen

10.) Nokia N93
- Carl Zeiss Optics Vario-Tessar (3.3/4.5-12.4) Autofocus with 3x Optical Zoom and 20x Digital Zoom
- 3.2 Megapixel Camera for crisp image and video quality
- Unique clamshell form with rotating screen
Reply With Quote

Tuesday, August 5, 2008

Biofuel குறித்த கட்டுரை



''இங்கிருந்து பார்த்தால் நம் பூமி நீலமும் பசுமையும் கலந்த ஒரு அழகிய பந்து போல காட்சியளிக்கிறது... காம்ரேட்''

-இது 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி முதன் முதலில் விண்ணுக்குச் சென்ற சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் ரேடியோ மூலம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரிடம் மனம் எல்லாம் மகிழ்ச்சி பூரிக்க உணர்ச்சிவசப்பட்டு சொன்னது...

அதே ககாரி்ன் இன்று உயிரோடு இருந்து, மீண்டும் விண்வெளிக்குச் சென்றிருந்தால் பூமி இப்போது இருக்கும் கோலத்தைப் பார்த்து அங்கேயே அலறித்துடித்து, மயங்கியிருப்பார்.

ககாரின் பார்த்த பூமி இப்போது இல்லை.. அவர் பார்த்த பசுமையும் இல்லை.. மரங்களை வெட்டியும், கனிமங்களை, பெட்ரோலியத்தை தோண்டியும் புண்ணாகிவிட்டோம் பூமியை.

'பூமியின் நுரையீரல்' என அழைக்கப்படும் அமேசான் மழைக் காடுகளின் (Rain forest) விஸ்தாரம் கடந்த 50 ஆண்டுகளில் 20 சதவீதம் அளவுக்கு சுருங்கிப் போய்விட்டது. சர்வதேச சட்டங்கள் போட்டாலும் இன்னும் அங்கே 'காடுவெட்டல்' தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதே போல பனிப் போர்வை போர்த்திய சைபீரியாவில் எண்ணெய் தோண்ட ஆரம்பித்து அந்தப் பகுதியையே பெட்ரோலிய கசடாய் மாற்றிவிட்டது ரஷ்யா.

தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கத்தால் வெளியேறும் 'கிரீன் ஹவுஸ் கேஸ்' (Greenhouse gases) பூமியின் வெப்பத்தை தொடர்ந்து உயரச் செய்து கொண்டிருக்கின்றன.

கிரீன் ஹவுஸ் கேஸ்களில் மிக முக்கியமானவை நீராவி, கார்பன் டை ஆக்ஸைட், குளோரோபுளூரோகார்பன் (Chlorofluorocarbon-CFC) எனப்படும் மீத்தேன், ஈத்தேன் ஆகியற்றின் மறு உருவங்கள் மற்றும் ஓஸோன்.

நீராவி நல்லது தானே.. அது எப்படி வெப்ப நிலையை கூட்டும் என்கிறீர்களா. உலகின் வெப்ப நிலையை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது மேகங்களும் அவை தாங்கியிருக்கும் நீராவியும் தான்.

அதே போல ஓஸோன் மண்டலம் தானே நம்மை அபாயகரமான சூரிய-விண் கதி்ர்வீச்சுக்களில் இருந்து காக்கிறது. அது எப்படி புவியின் வெப்பத்தைக் கூட்டும்?

இது பூமி்க்கு 10 முதல் 50 கி.மீ. உயரத்தில் இருக்கும்போது தான் (இது தான் ஓஸோன் லேயர்) 'ஆபத்பாந்தவன்'. சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் (UV) கதிர்வீச்சு கொண்ட போட்டான்களை (Photons) தடுத்து விண்ணுக்கே திருப்பி விடும் மாயஜாலம் தான் ஓஸோன்.

ஆனால், இதே ஓஸோன் நம் வளி மண்டலத்தில், அதாவது பூமிக்குள் சுற்றினால் அது அபாயம். மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் (atoms) கொண்டது தான் ஒரு ஓஸோன் மூலக்கூறு. இது பூமிக்குள் உலாவும் போது நம் உடம்புக்கும் நல்லதில்லை, பூமிக்கும் நல்லதில்லை. இது நம் நுரையீரலை பதம் பார்ப்பதோடு புவியின் வெப்ப நிலையை உயர்த்தும் வேலையையும் பார்க்கிறது.

கண்ணதாசன் சொன்னது மாதிரி.. 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் தான் எல்லாம் செளக்கியம்'. இடம் மாறி வந்தால் பிரச்சனை தான்.

அதே போல மீத்தேன், ஈத்தேன் ஆகியவை தனியே இருக்கும்போது பிரச்சனையில்லை. அவை குளோரின், புளோரினுடன் சேர்க்கப்பட்டு (CFC-களாக மாற்றப்பட்டு) நம் அலுவலக-வீட்டு ஏசி, ரெப்ரிஜிரேட்டர்களில் குளிரிவிப்பானாக பயன்படுத்தப்படும்போது தான் சிக்கல்.

இந்த CFC வளி மண்டலத்தைத் தாண்டி மேலே பயணிக்கும்போது ஓஸோனில் ஓட்டை போடுகின்றன.

இப்படி போகிறது.. கிரீன்ஹவுஸ் கேஸ்களின் தாக்கம்.

சைக்கிள்களுக்குப் பேர் போன சீனாவில் கார்கள் பெருக்கம், வளி மண்டலத்தை சல்பர்-டை ஆக்ஸைட் மண்டலமாக மாற்றிவிட்டது. சீனா மற்றும் தெற்காசிய நாடுகளில் அவ்வப்போது வாகன-தொழிற்சாலை புகைகளால் ஏற்படும் புகை மூட்டம் அந்த நாடுகளையே பல வாரங்கள் ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.

(பெய்ஜிங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட புகை மூட்டம் ஒலிம்பிக் போட்டிகளையே கேள்விக்குறியாக்கிவிட, அங்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நல்ல வேளையாக மழை பெய்து புகையை கலைத்தது.)

இப்படி பூமியை நாம் படாதபாடு படுத்த பதிலுக்கு பூமியும் நமக்கு பாடம் புகட்ட ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டது. ஆனால், அதன் தாக்கம் இந்த நூற்றாண்டில் தான் மிகவும் வலுவாக உணரப்படுகிறது.

'எல் நினோ' (El NiÑo ), 'லா நினா' (La NiÑa) ஆகிய கடலில் ஏற்படும் வழக்கமான புவியியல் மாற்றங்கள் டிராபிக்ஸ் (Tropical zones) எனப்படும் வெப்ப மண்டலப் பகுதிகளில் கன மழையையும் டெம்பரேட் (Temperate zones) எனப்படும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கடும் வறட்சியையும் ஏற்படுத்தி விவசாயத்தையையும் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு வருகின்றன.

பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக பசிபிக் பெருங்கடலின் மேல் மட்டத்தில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றம் தான் எல் நினோ, லா நினா. இந்த மாற்றங்கள் பல மில்லியன் ஆண்டுகளாய் ஏற்பட்டு வருவது தான். இதனால் ஏற்படும் கடல் நீரோட்ட மாற்றங்கள், வெப்ப நிலை மாற்றங்களை பூமி மில்லியன் ஆண்டுகளாய் சந்தித்துக் கொண்டே தான் வருகிறது.

ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்பின் அளவு ஆண்டுகாண்டு அதிகரித்துக் கொண்டே வருவது தான் புதிய கவலையை பரவச் செய்துள்ளது.

மேலே சொன்ன எல்லா விஷயங்களாலும் உடனடியாக பாதிக்கப்படுவது விவசாயம் தான். முன்பெல்லாம் விவசாயம் பாதிக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்தப் பகுதியோ, அந்த நாடோ தான் சிக்கலை சந்திக்கும்.

ஆனால், உலகமயமாக்கல் எல்லா நாடுகளையும் சிலந்தி வலை மாதிரி பின்னிப் போட்டுவிட்டதால், ஆஸ்திரேலியாவில் மழை பெய்யாவிட்டால் தென் அமெரிக்காவில் கோதுமை விலை ஏறும் நிலை உருவாகிவிட்டது.

எப்போதுமில்லாத வகையில் ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் ஏற்பட்ட 7 ஆண்டு தொடர் வறட்சி உலகம் முழுவதுமே கோதுமையின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. காரணம், உலகின் மிகப் பெரிய கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா தான்.

அங்கு விளையும் கோதுமையை நம்பி பல நாடுகள் கோதுமை உற்பத்தியை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டன. கோதுமை விளைந்து வந்த அந்த நிலங்களில் இப்போது பயோ பியூல் (bio-fuel) தயாரிப்புக்கு உதவும் மக்காச்சோளம், சோயா, ஜெட்ரோபா ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

காரணம், கோதுமையை விட இந்த பயோ பியூல் பயிர்களில் கிடைக்கும் பல மடங்கு லாபம்.

இப்படி சாப்பாட்டை விட்டுவிட்டு பயோ-பெட்ரோல் தயாரிப்பில் பல நாடுகளில் இறங்கிவிட்டதற்குக் காரணம், கச்சா எண்ணெய்யின் விலை 'குண்டக்க மண்டக்க' உயர்ந்தது தான்.

இதனால் 'பயோ பியூல்' தாவரங்கள் உற்பத்தியாகும் பரப்பு விரிந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இதன் காரணமாய் உலகம் முழுவதும் இப்போது ஒரு புதிய போர் மூண்டு வருகிறது...

அது வயிறுகளுக்கும் வாகனங்களின் பெட்ரோல் டாங்குகளுக்கும் இடையே மூண்டுள்ள நவீன போர்...!

Thursday, July 31, 2008

இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். "வரும் பொதுத் தேர்தலில், ஜெயிலில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் முதல் அனைத்துக் கைதிகளும் ஓட்டுப் போடுவார்கள். அதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு போடுவார்கள். கோர்ட்டும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கும்... பாருங்கள்!' என நண்பர் என்னிடம் கூறவும் அதிர்ந்து போன நான், "அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க சாத்தியமே இல்லைங்க!' என்று பதில் கூற, நண்பர் தொடர்ந்தார்."என்ன நண்பரே... உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, பண்பாடுகளும் கலாசாரமும், இறையாண்மையும் நிறைந்த ஒரு இந்தியநாட்டின் அரசாங்கத்தைக் காப்பாற்ற படுபயங்கர கொலைகள் செய்து, அவை நிரூபிக்கப்பட்டு,

நமது கோர்ட்டால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை, நம்பிக்கை ஓட்டுப் போடுவதற்கு மத்திய அரசே ஏற்பாடு செய்கிறது.சுப்ரீம் கோர்ட்டும் அவர்களை அனுமதிக்கிறபோது, வரும் தேர்தலில் ஓட்டுப் போட நாட்டிலுள்ள மற்ற கைதிகளையும் அனுமதிக்கலாம் அல்லவா?மேலும், பப்பு யாதவ் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டுப்போட அனுமதி கேட்ட போது, "இது தப்பு யாதவ்' என நமது சுப்ரீம் கோர்ட்டே சொல்லவில்லையே...!' என நண்பர் மனவேதனையுடன் கூறியபோது என்னால் பதில் கூற முடியவில்லை.ஒருபக்கம், ஆங்காங்கே குண்டுகளை வைத்து அப்பாவி மக்களின் உயிரைக் கொல்கின்றனர் பயங்கரவாதிகள்.

இன்னொரு பக்கம் கொலைக் குற்றவாளிகள் ஓட்டுப்போட்டு, ஜெயித்துநாட்டை ஆள்பவர்களாகி, மக்களின் மனதைக் கொல்கின்றனர்.எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்தியாவில் பிறக்க வேண்டும், அதிலும் இந்தியனாய் வாழவேண்டும் என நமது தேசத்தின் மீது நேசம் கொண்ட ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். ஆனால்...நடப்பவற்றை நினைத்துப் பார்த்தால், நின்றுவிடவா? என இதயம் கேட்கிறது. கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. எம் இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?யார் இதற்கு பதில் சொல்வார்கள்? ஒன்றும் சொல்லத் தெரியவில்லை எமக்கு!

பொருளாதாரத் தீர்வு !!!

பணவீக்கம் 11 விழுக்காட்டையும் தாண்டி எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இயற்கையின் மர்மப் புதிர்களை அவிழ்த்து சுனாமி எனும் பேரழிவுக்குக் கூட அறிவியல் விளக்கமளித்து விட்டது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மனிதப் பேரழிவுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. யானையைத் தடவிய குருடர்களைப் போல பணவீக்கத்துக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கங்கள், பணவீக்கத்தைக் காட்டிலும் பெரிதாக வீங்கிக் கொண்டே செல்கின்றன.

எந்தக் கோணத்தில் செய்யப்படும் வியாக்கியானமாக இருந்தாலும், அவையனைத்தும் உலக நிதிமூலதனக் கும்பலை, பன்னாட்டு நிறுவனங்களை, அமெரிக்க வல்லரசை, ஒரு வார்த்தையில் கூறினால் உலக முதலாளித்துவத்தையே குற்றவாளி என்று அடையாளம் காட்டுகின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக உலகெங்கிலும் ஒரே நேரத்தில் எழும்பியிருக்கும் இந்த செயற்கை சுனாமி, இயற்கை சுனாமியைப் போலன்றி, ஏழைகளின் மீது மட்டுமே பேரழிவை ஏவி வருகின்றது.

"உழைப்புச் சக்தி உள்ளிட்ட எல்லாப் பண்டங்களின் பணமதிப்பும் (விலையும்) உயருதல்'இதுதான் பணவீக்கம் என்ற சொல்லுக்கு முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் அளிக்கும் விளக்கம். ஆனால் நாம் காணும் உண்மை நிலைமை என்ன? அரிசி முதல் பெட்ரோல் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் ஊதியம் உயரவில்லை. எனவே இந்த விலைவாசி உயர்வைச் சமாளிப்பதற்காக உணவு உள்ளிட்ட தமது நுகர்வுகளை மக்கள் குறைத்துக் கொள்கிறார்கள்; அல்லது வருமானத்தைக் கூட்டுவதற்காக உழைப்பு நேரத்தை அதிகரித்திருக்கிறார்கள். "உழைப்பை அதிகரிப்பது அல்லது நுகர்வைக் குறைப்பது' இரண்டின் பொருளும் ஒன்றுதான். பணவீக்கத்தின் காரணமாக வீழ்ச்சி அடைந்திருப்பது பணத்தின் மதிப்பு அல்ல; உழைப்புச் சக்தியின் மதிப்பு. இது உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்களின் மீதும் உலக முதலாளித்துவம் ஏவியிருக்கும் மறைமுக ஊதிய வெட்டு!

இந்தப் "பண வீக்கத்தின்' மூலம் பிழிந்தெடுக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்புதான், கொள்ளை இலாபமாகக் குவிந்து கொண்டிருக்கின்றது. விலை உயர்வைச் சமாளிக்க நீங்கள் குறைத்துக் கொண்ட ஒரு வேளைச் சோறு, நிறுத்தப்பட்ட உங்களது மகனின் படிப்பு, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பணம் .. இவைதான் தங்கக் காசுகளாக மாறி அம்பானி, டாடாக்களின் பணப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. எனவேதான் நிதி மூலதனக் கொள்ளையர்கள், பன்னாட்டு முதலாளிகளின் இலாபம் வீங்கிக்கொண்டே போகிறது.

பணவீக்கம்விலைவாசி உயர்வு ஆகியவை குறித்த பொருளாதாரச் சொற்சிலம்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இப்படியொரு எளிமையான கேள்வியை எழுப்பிப் பாருங்கள். கச்சாப் பொருட்களின் விலையும் உற்பத்திச் செலவும் அதிகரிக்காத போது, இரும்பின் விலையும் சிமெண்டின் விலையும் பிற பொருட்களின் விலையும் ஏன் உயர வேண்டும்? அவற்றின் விலைக்கு அரசாங்கம் ஏன் ஒரு உச்சவரம்பை நிர்ணயிக்கக் கூடாது? ""முடியாது. சந்தையின் சுதந்திரத்தில் அவ்வாறு தலையிட முடியாது'' என்று இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார் சிதம்பரம். ஒரு குடிமகனின் உயிர் வாழும் உரிமையைக் காட்டிலும், ஒரு மனிதனின் உணவுக்கான உரிமையைக் காட்டிலும், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கான முதலாளிகளின் உரிமைதான் மேன்மையானதாம்! ""எனினும் இது ஒரு பொருளாதாரக் கொள்கை மட்டுமே. இதனை அரசியலாக்காதீர்கள்'' என்கிறார் அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங். இதனைப் பொருளாதாரக் கொள்கையாக மட்டுமே நாம் ஒப்புக் கொள்வோமானால் அந்தக் கொள்கை வழங்கும் தீர்வான பட்டினிச்சாவையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.

மக்கள் தங்களை வருத்திக் கொள்வதன் மூலம், இந்தப் பாரதூரமான நிலைமையை எத்தனை நாளைக்குச் சமாளிக்க முடியும் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் ""மலிவாக உணவுப் பொருட்கள் கிடைத்து வந்த காலம் மலையேறி விட்டதாக''ப் பொருளாதார வல்லுநர்கள் பயமுறுத்துகிறார்கள். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அடுத்த ஓரிரு மாதங்களில் இருநூறு அமெரிக்க டாலரைத் தொட்டுவிடும் என அச்சமூட்டும் விதத்தில் செய்திகள் வெளிவருகின்றன.

உழைக்கும் மக்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் திணறுவதை விடப் பரிதாபகரமானது, விலைவாசி உயர்வைச் சகித்துக் கொண்டு வாழும் மனோபாவம்தான். ஏனென்றால், இந்தச் சகிப்புத் தன்மை, அவர்களைச் சுய அழிவை நோக்கி அல்லவா தள்ளிச் செல்கிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை, ஏறத்தாழ 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தீராத நோய்க்கு ஆட்பட்டுள்ள பல நோயாளிகள் மருந்து உட்கொள்வதையே நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வீ.எஸ். நடராசன். விலைவாசி உயர்வைச் சமாளிக்க இன்று தங்களின் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் மக்கள், நாளை பட்டினி கிடந்து நிலைமையைச் சமாளிப்பார்களா?

உழைக்கும் மக்களிடம் காணப்படும் இந்தச் சகிப்புத் தன்மைதான், பெட்ரோல் விலை உயர்வு என்ற இடியை மக்களின் தலையில் இறக்கும் தைரியத்தை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பெட்ரோல் விலையை முன்னரே உயர்த்தியிருக்க வேண்டும்'', ""விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விடும் தைரியத்தை ப.சிதம்பரத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பொருளாதார வளர்ச்சி இருந்தால் விலைவாசி உயரத்தான் செய்யும்'' என அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங் திமிராகப் பேசுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது.

இந்தப் பொருளாதார வளர்ச்சி உழைக்கும் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது. அதேசமயம், கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கும் அம்பானிக்கு, 200506இல் கிடைத்த 5,195 கோடி ரூபாய் இலாபத்தை 200607இல் ரூ. 10,372 கோடியாக வாரி வழங்கியிருக்கிறது. விலைவாசி உயர்வினால் நடுத்தர வர்க்கம் கூட வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடும் பொழுது, முகேஷ் அம்பானியோ 4,000 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர அரண்மனையைக் கட்டி வருகிறார்.

இப்படிப்பட்ட மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு கொண்ட பொருளாதார வளர்ச்சி அருவெறுக்கத்தக்கது. இதனை எதிர்த்துப் போராடினால், இருக்கின்ற வாழ்க்கையும் அழிந்து போய் விடுமோ என்ற அச்சம் உழைக்கும் மக்களை ஆட்டிப் படைக்கலாம். ஆனால், போராடாமல் சகித்துக் கொண்டு வாழ்ந்தால், இன்று இருப்பதைவிட மோசமான வாழ்க்கையை அல்லவா நாளை நாம் வாழ வேண்டியிருக்கும்?

உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற தீர்வை, பட்டினிச் சாவையும் வறுமையையும் ஒழிக்கின்ற வகையிலான பொருளாதாரத் தீர்வை நாம் தேடுவோமாயின், "நாம் உயிர் வாழ வேண்டுமானால், உலக முதலாளித்துவம் உயிர்வாழக் கூடாது' என்ற தீர்வே நமக்கு விடையாகக் கிடைக்கிறது. இதனைப் "பொருளாதாரத் தீர்வு' என்று ஆளும் வர்க்கம் ஒப்புக் கொள்வதில்லை. இதைத்தான் "அரசியல்' என்கிறார் அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங்

Thursday, July 17, 2008

தமிழா ! தமிழா !

ஒரு இனத்தை அழிப்பதற்கு ஒன்று படை எடுத்து சென்று அழிக்கவேண்டும் அது முடியாவிட்டால் கூட இருந்தே குழி பறிக்கவேண்டும் இதில் ஆரிய இந்தியா தமிழர்களை அழிக்க தேர்ந்தேடுத்து இருப்பது இரண்டாவது வழிமுறையாகும் இதை சற்று விரிவாக பார்ப்போம்.ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அவர்களது பூர்வ நிலம் மற்றும் பொருளாதார வளம் உயிர் நாடியான நீர் அதை ஒட்டிய விவசாயம், பண்பாடுகாளன வீரம்,கலாசாரம் ஆகியவற்றை பூண்டோடு அழிப்பதாகும். இதில் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.அன்று காவிரிதாயை தடுத்து சிறு சிறு மணல் குன்றுகளை ஏற்படுத்தி தடுத்த கன்னட மன்னர்களை சோழ மன்னர்கள் புறமுதுகு இட்டு ஓடசொய்து மணல் குன்றுகளை அகற்றி மீண்டும் காவிரிதாயை தமிழ் நாட்டிற்கு வரசெய்தான் அன்று மணல் குன்று இன்று அணை.இப்போது செய்யமுடியவில்லை ஏன்?இன்று விவசாயம் பொய்த்து போய் கட்டட வேலை செய்யவும் கக்குஸ் கழுவவும் வெளி நாட்டுக்கும் வெளி மா நிலங்களுக்கும் செல்கிறார்கள் ஆனால் நமது சொந்த மானிலத்தை பார்த்தால் மார்வாடிகளும் ,குசராத்திகளும் ஏனைய இனத்தவரும் சொகுசாக வாழ்கிறார்கள்.அதிலும் இந்த மலையாளிகளின் கொட்டம் சத்தமின்றி உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. டீக்கடையில் ஆரம்பித்து இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லை மீறி விட்டது. ஊர் நாட்டிலிருந்து இங்கே வந்து ஒருத்தன் தொழில் செய்தால் பரவாயில்லை, மாமன், மச்சான், அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா என எல்லோரையும் இங்கே இறக்குமதி செய்து விடுகின்றனர் இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் எனில் ஏன் ஊரை விட்டு நாடோடிகளாய் அலைகின்றனர். கேரளாவில் ஏன் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை? காரணம் இவர்களின் குள்ள நரித்தனமும் கம்யூனிசப் போக்கும் தான். அங்கே பருப்பு வேகாமல், இங்கே வந்து டேரா போட்டுக் கொண்டிருக்கின்றனர்.சரி இந்த ஆரியர்கள் நம்முடைய வீரத்தையாவது மதித்தார்களா,இரண்டாம் உலக போரின் போது இங்கு வெள்ளையன் கேட்டான் உங்களுடைய வீரப்பரம்பரையினரின் ஆட்களை தாருங்கள் என்று அப்போதும் இந்த ஆரியர்கள் தமிழர்களை தள்ளிவிட்டு எனைய சிங்கு,வங்காளி,மாரத்தி போன்ற இனங்களையே சேர்த்தார்கள், ஆனால் வெள்ளயனுக்கும் தெரியும் வரலாற்றுக்கும் தெரியும் யார் முதலில் வீரத்துடன் போராடினார்கள் என்று .

சரி ஒருசாரரான மீனவர்களையாவது நிம்மதியாக விட்டார்களா?இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்? இந்தியாவின் கடலோரக் காவல்படை சுழன்று சுழன்று சுற்றி வந்தபோதும் தமிழக மீனவர்களைச் சிங்களர் சுட்டுக் கொல்வதும் கடத்திச் செல்வதும் தடுக்கப்படவில்லையே ஏன்? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் மீன்பிடித்தால் அவர்களைத் தளைப்படுத்தலாம். அதைவிடுத்து அவர்களை சுட்டுக் கொல்வது என்ன ஞாயம்? தமிழகத்திற்குரிய கச்சத்தீவை இந்திராகாந்தி சிங்கள அரசுக்குக் கொடுத்ததால்தானே, எல்லை தாண்டித் தமிழக மீனவர்கள் வந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டே வருகிறது. சாகின்றவர்கள் தமிழர்கள்; எனவே, சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது.சரி இதை எல்லாம் பார்த்து இங்குள்ள கட்சிகள் என்ன செய்கிறது? தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம். இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார், 2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர், திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள். இந்திய அடிவருடியாகவும்,அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..?

தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர்.

தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானே தவிர பெருமுதலாளிகள் தலைமையிலான இந்தியத் தேசியத்தை அல்ல!

- தமிழ்

Wednesday, July 16, 2008

நம் பாரம்பரியத்தை நாமே இழக்கலாமா?


ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய கண்டங்களின் உட் பகுதிகளில் சுற்றிய அனுபவம் சொல்லும் பாடம், இந்திய உணவு குறிப்பாகத் தென்னிந்திய உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது. சில நகரங்களில் மட்டும் தான் நம்மூர் ஆட்கள் தனிக் கடைகள் வைத்து நம்மூர் உணவுகளைத் "தங்க' விலைக்கு விற்றுக் கொண்டிருப்பர். சிறு நகரங்களிலும், ஊர்களிலும் அத்தகு வசதி எதுவுமில்லை. பட்டினி கிடப்பது தவிர வேறு வழியில்லை. நட்சத்திர ஓட்டல்களில் தங்கினாலும் மாடும், மனுஷனும் கிடைப்பரே தவிர, நாம் நாடும் உணவைப் பெற்றுப் பசியாறிட முடியாது.

நம் ஊர் நட்சத்திர விடுதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்விடுதிகளில் ஐரோப்பிய, அமெரிக்க உணவுகள் அதே மாதிரியில், அதே சுவையில், அதே வடிவ சீனத் தட்டுகளில் கிடைக்கும். நம்மூர் உணவு தான், நம் ஊர்ச் சுவையுடன் கிடைக்காது. எத்துணை வேறுபாடு? ஐரோப்பியரோ, அமெரிக்கரோ நம் நாட்டிற்கு வந்தால் அவருக்கு ஏற்ற உணவைப் பெரும்பாலும் பெற்று உண்டு விட முடியும். ஐநூறு ஆண்டுகள் ஐரோப்பியர் கள் நம்மை ஆண்ட போதும், நம்முடைய உணவு வகைகள் எதனையும் கற்றுக் கொள்ளவோ, நம் நாட்டிற்கு எடுத்துச் செல்லவோ நம் உணவுகளுக்குப் பழக்கமாகவோ, அடிமையாகவோ அவர்கள் ஆனதில்லை. மறுதலையாக நம் ஊர் விடுதிகளில் வழங்கப் பெறும் உணவுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய, அமெரிக்கச் சுவை நோக்கிச் சென்றுவிட்டன.

ஐரோப்பியருடைய பண்பாடு, உடல் சார்ந்தது; லவுகீகத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் பண்பாடு மனம் சார்ந்தது; ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் மூளைக்கே முதலிடம் கொடுப்பர்; நாம் இதயத்திற்கு முதலிடம் கொடுப்பர். அவர்களுக்கு அறிவியல் முக்கியம்; நமக்கோ கலையில் முக்கியம்.

இந்நிலையில், நம் ஊரிலேயே நம் உணவு முறை, உடை முறை, குடும்ப உறவு முறை, நல்ல பழக்க வழக்கப் பண்பாடுகளை நாம் ஏன் இழக்க வேண்டும்? பெற்றவளே குழந்தையைக் கைவிட்டு விட்டால், அக்குழந் தையை எடுத்து வளர்ப்பார் யார்? ஐரோ-அமெரிக்க முறைகளுக்கு மாறினதால் வந்துள்ள வயிறு, குடல் சார் நோய்களையும், பாலுறவு நோய்களையும் வராமல் தடுத்துக் காத்துக் கொள்வது எங்ஙனம் சாத்தியமாகும்?

இஸ்ரேல் நாட்டு யூதர்களைப் பற்றிய வரலாறு உலகம் அறிந்த ஒன்று. கி.மு.,வில் தம் பிறந்தகத்தை விட்டு ரோமானியர்களால் விரட்டப்பட்ட அவர்கள் உலக நாடெங்கும் அகதிகளாகவும், அனாதைகளாகவும் திரிந்தனர் என்றாலும், சென்ற இடங்களில் சிக்கனமாக இருந்தனர். கல்வி கற்பதில் முனைப்போடு இருந்தனர்.

அனைத்திலும் மேலாகத் தம் சமய ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். 1948ல் இஸ்ரேல் தனி நாடாக மத்திய ஆசியப் பகுதியில் உருவான போது, அவர்களுடைய தாய்மொழி ஹீப்ரு பேசப்படும் மொழியாக இல்லை. அவர்கள் கோவில்களில் பூஜை மொழியாக மட்டுமே இருந்தது. அத்தகு நிலையிலிருந்த மொழியை உயிர்ப்பித்து, புதிதாக எழுத்தமைத்து இஸ்ரேலிய ஆட்சி மொழி ஆக்கினர். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் யூதர்களைத் தாயகம் நோக்கி அழைத்தனர்.

அப்போது, கேரளப் பகுதியிலிருந்தும், வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்தும் யூதப் பரம்பரையினர் தம் தாயகம் செல்லத் துடித்தனர். உடனே, அவர்களை இஸ்ரேலிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் உண்மையாக யூதப் பரம்பரையில் வந்தவர்கள் தானா என்று பரிசோதித்துப் பார்த்தனர்.

பரிசோதனையில் முக்கியமானது, அவர்கள் தங்கள் பூர்வீக மதச் சடங்குகளைக் கொண்டுள்ளனரா என்பது தான் முதலாவதாக இருந்தது. அதன் அடிப்படையில் அம்மக்கள் இஸ்ரேலியக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தம் பாரம்பரிய வேர்களை இழக்காமல் எத்துணைச் சோதனைகள் நேர்ந்த போதும், அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் உலக மக்களிடையே யூதர்களுக்கு முதலாவது இடம் கொடுக்க வேண்டும்.

சமூக உளவியல் அறிஞர்கள், சீனர்களைத் தம் பாரம்பரியத் தைக் கப்பாற்றுவதில் குறிப் பிட்டுப் பேசுகின்றனர். சீனர்கள் அடிப்படையில் தாம் தாம் உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று நம்புகிறவர்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன தாம் உயர்ந்தவை என்று கருதுகிறவர்கள். தலைமைக்குக் கட்டுப் படுகிறவர்கள். உலகத்தின் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் தங்கள் அடையாளத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்பவர்கள். அவர்களுடைய பெயர், மூன்று கூறுகளை உடையதாக இருக்கும். குடும்பப் பெயர், இனப் பெயர், தன் பெயர் என அமைந்திருக்கும். சான்றாக மா சே துங். இம்மூன்று கூறுகளும் மேற்கண்ட வரிசை முறையை உடையவை.

இம்முறையை அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை. நிர்பந்தங்களின் காரணமாக எங்கேனும் மதம் மாற நேர்ந்தாலும், அவர்களுடைய சீனப் பெயரும் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தப் பிடிவாதம் தான், 15ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் சீனாவை அடிமைப்படுத்த முயன்ற போது, அரசர் உட்பட அனைவரையுமே எதிர்க்க வைத்தது.

இதில், அவர்கள் முழு அளவு வெற்றி பெறவில்லை என்றாலும், முழு வெற்றி பெற்றவர்கள் சீன (மங்கோலிய) இனத்தைச் சேர்ந்த ஜப்பானியர்கள், தாய்லாந்துகாரர்கள். ஐரோப்பியர்களுக்கு அடிமைகளே ஆகாத ஆசிய நாடுகள் இவை என்பது உலக வரலாறு. புதிய கடவுள் போதனை செய்ய வருகிறோம் என்று நெதர்லாந்தில் இருந்தும் பிரான்சிலிருந்தும் மத போதகர்கள் தம் நாட்டிற்கு வந்த போது, அவர்களை உள்ளே நுழையவே ஜப்பானிய அரசும், தாய்லாந்து அரசும் அனுமதி அளிக்க மறுத்து விட்டன.

யூதர்கள், சீனர்கள் மட்டுமின்றி, இன்று உலகெங்கும் தம் ஆதிக்கத்தைச் செலுத்தும் ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்கு மூலவரான கிரேக்கரும் ரோமானியரும் தம் வேர்களை இழக்காத வித்தகர்கள் என்று சொல்ல வேண்டும். மிகப் பழைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் உடையது கிரேக்கம். அதனது பாதிப்பால் மேலும் பரிணமித்தது ரோமானியம்(இத்தாலி).

இவ்விரண்டிலிருந்து தான் ஐரோப்பிய மேற்குலகக் கலாசாரம் பிறந்து வளர்ந்து, தழைத்து உலகம் முழுவதும் படர்ந்தது. ஐரோப்பிய நாடுகள், தமக்குள் முரணிக் கொள்ளுமே தவிர, ஆசிரியர், ஆப்ரிக்கர் முதலானோர்க்கு அடிமை ஆனதே இல்லை. (மங் கோலியத் தலைவன் செங்கிஸ் கான் ஆண்ட சில காலம் தவிர)

நிக்காலோ மானுச்சி (கி.பி.1653-1708) என்ற இத்தாலியரின் பயணக் குறிப்பு இதை மேலும் உறுதி செய்கிறது. கி.பி.1653ல் வெனிஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் வழி, மானுச்சி 14 வயது சிறுவனாக உலகைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் புறப்பட்டார். கடலிலும் தரையிலுமாக 1380 மைல் கடும் பயணம் செய்து, தன் நண்பர் ஒருவருடன் இந்தியா வந்தடைந்தார். அப்போது, இந்தியாவை அவுரங்கசீப் ஆண்டு கொண்டிருந்தார்(1658).

உடன் வந்த நண்பர் இறந்து விட, மொகலாயச் சட்டப்படி, நண்பரின் உடைமைகளை நேரில் கைப்பற்ற அரசாங்க அதிகாரி, மானுச்சி தங்கி இருந்த இடத் திற்கு படை பரிவாரங்களுடன் வந்தார். வந்தவர், மானுச்சியின் உடைமைகளையும் சேர்த்துக் கைப்பற்றினார். மானுச்சி தடுத்தார். அப்போது, மொகலாய அரசு அதிகாரி, "நீ எங்கள் அரசருடைய அடிமை' என்று சீறினார். அதை மறுதலித்த மானுச்சி, "ஐரோப்பியர்கள் என்றும் எப்பொழுதும் எவருக்கும் அடிமையாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டார்கள்,'' என்று கர்ஜித்தார். பின்னாளில், அவரே டில்லி அரச ஆலோசகராய் பதவியில் அமர்ந்தார்.

ஆக கூர்ந்து பார்த்தால், உலகில் பல நூறு ஆண்டுகளாகத் தம் தலைமையை உலக வரைபடத்தில் இருந்து இழக்காமல் நிரந்தரப்படுத்திக் கொண்டிருக் கும் யூதர், சீனர், கிரேக்கர், ரோமானியர் முதலான ஐரோப் பிய இன மக்களிடம் இருந்த மிக முதன்மையான பண்பு, தம் பாரம் பரியத்தை இழக்காமை தான்.

எனவே தான், உலகம் முழுவதும் பரவியிருக்கும் பண்பாட்டுத் தழுவுதலை மூன்று வகையாக்கி அறிஞர்கள் சொல்கின்றனர்.

முதல் வகை : ஐரோப்பிய முறை: ஐரோப்பியர் தம் தாயகத்திலும் செல்லும் இடங்களிலும் தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை இழக்காததுடன், சென்ற இடங்களில் வாழும் உள்நாட்டு மக்களிடமும் பரப்பி விடுவர். உள்நாட்டு மக்கள் தம் மொழி, பண்பாடு, நாகரிகத்தை விட ஐரோப்பியருடையது தான் உயர்ந்தது என்று நம்பவும் வைத்து விடுவர்.

இரண்டாம் வகை : யூத முறை: தாய் நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சிதறிய யூதர்கள், தமக்குரிய பண்பாடு முதலானவற்றை இழக்கமாட்டர். அன்றியும் தம்முடையவற்றை மற்றவர்கள் மேல் திணிக்கவும் மாட்டர்.

மூன்றாவது வகை : நீக்ரோ முறை: இம்மக்கள் தம்மையும், தம் தாயகத்தையும் அடிமைப்படுத்திய அயல்நாடுகளின் இறக்குமதிப் பண்பாடு முதலானவற்றை ஏற்றுக் கொள்வதுடன், தம்முடைய பாரம்பரியப் பண்பாட்டையும் தம் தாயகத்திலேயே இழந்து விடுவர்; இழிவாகவும் கருதுவர். இம்மூன்று முறைகளில் நாம் எந்த முறையைச் சேர்ந்தவர்கள் என்பதை எண்ணிப் பார்ப்போமா?

நன்றி்-க.ப.அறவாணன்

Tuesday, July 1, 2008

கச்சா எண்ணெய் விவகாரத்தின் பின்னணி என்ன?


கச்சா எண்ணெய் விலைகள் கூடுவதற்கு உலகளவில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஐந்து காரணங்கள் மிகவும் முக்கியமானவை:உலகளவில் எண்ணெய் உபயோகம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் உபயோகம் அதிகமாக இருக்கிறது.விலை சரியாமல் இருப்பதற்காக சில சமயம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன. இது செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை மறுபடி கூட்ட உதவுகிறது.சில சமயம் சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டுப் பிரச்னைகள் அண்டை நாடுகளுடன் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவைகளால் எண்ணெய் உற்பத்தி குறைகிறது அல்லது நிறுத்தப்படுகிறது.


எண்ணெய் விலை வருங்காலங்களில் உயரும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு உள்ளவர்கள் மார்ஜின் பணத்தை செலுத்தி டிரேட் செய்யலாம். இதில் உலகளவில் பலர் ஈடுபட்டுள்ளதால், இதுவும் தற்போது கச்சா எண்ணெய் விலை கூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.டாலர் மதிப்பு, கூடிவரும் பணவீக்கம், குறைந்து வரும் பங்குச் சந்தை ஆகியவைகளால், முதலீட்டாளர்கள் தங்கம், எண் ணெய் முதலீடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், எண்ணெய் வழுக்கிக் கொண்டு கீழே இறங்காமல் மேலே ஏறிக்கொண்டு இருக்கிறது.அமெரிக்காவில் எண்ணெய் உபயோகம் குறைந்துள்ளது என்று வந்த புள்ளி விவரத்தை அடுத்து, சென்ற வாரம் ஒரு பேரல் 132 டாலர் அளவிற்கு குறைந்தது.


ஆனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150-170 டாலரை எட்டும் என்று விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து விலை மறுபடி கூட ஆரம்பித்தது. தற்போது 140யை தாண்டி நிற்கிறது.கச்சா எண்ணெய் என்றால் என்ன?கச்சா எண்ணெய் என்றால் ஹைட்ரோ கார்பன் கலந்த ஒரு திரவம்.


இனிப்பான கச்சா எண்ணெய் : கச்சா எண்ணெயில் எத்தனை வகைகள் உள்ளன? வெஸ்ட் டெக்சாஸ் இண்ட்ர்மீடியேட் கச்சா எண்ணெய் தான் உலகிலேயே சிறந்த எண்ணெய். மற்ற கச்சா எண்ணெய்களை விட 2 முதல் 4 டாலர் வரை அதிகமாக விற்கப்படுகிறது. இதில் குறைந்த அளவே சல்ப்பர் இருப்பதால் (0.24 சதவீதம்) இது இனிப்பான கச்சா எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உபயோகிக்கப்படும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் அதிக சல்ப்பர் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யபடுவதாகும்.


முக்கியமான பொருளா என்ன?: ஒரு பேரல் என்றால் என்ன?ஒரு பேரல் என்றால் 42 அமெரிக்க காலன். அதுவே லிட்டரில் பார்த்தால் 158.98 லிட்டர். ஒரு டன் கச்சா எண்ணெய் என்பது 7.33 பேரல்.எண்ணெய் மேல் ஏன் இவ்வளவு பிரியம் காட்டுகிறோம். அவ்வளவு முக்கியமான பொருளா என்ன?ஆமாம். உலகளவு எரிசக்தி தேவையில் 40 சதவீதத்தை கச்சா எண்ணெய் தான் சமாளிக்கிறது. உலகளவில் ஒரு நாளைக்கு 76 மில்லியன் பேரல் உபயோகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் தினசரி 20 மில்லியன் பேரல்களும், சீனாவில் தினசரி 5.6 மில்லியன் பேரல்களும், ஜப்பானில் தினசரி 5.4 மில்லியன் பேரல்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.


எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்றால் என்ன?


உலகின் 40 சதவீதம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான அல்ஜீரியா, இந்தோனேஷியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதி அரேபியா, யூ.ஏ.இ., ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு தான் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. இந்த நாடுகளிடம் தான் 75 சதவீத எண்ணெய் ரிசர்வ்கள் உள்ளன. உலகின் 55 சதவீத ஏற்றுமதியை இவர்கள் தான் செய்து வருகின்றனர்.இந்தியா ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய் உபயோகிக்கிறது?


இந்தியா முதல் 10 இடங்களில் ஒன்றாக வருகிறது. தினசரி 2.2 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது.இந்தியாவில் எண்ணெய் கிடைப்பதில்லையா?இந்தியாவின் ஒரு நாள் எண்ணெய் உற்பத்தி 0.8 மில்லியன் பேரல்கள் தான். 70 சதவீதம் நாம் இறக்குமதியையே நம்பி இருக்கிறோம். தற்போது ராஜஸ்தான், பாம்பே ஹை போன்ற இடங்களில் எண்ணெய் வளங்கள் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் வருங்காலங்களில் இவை நமது தேவையை சிறிது பூர்த்தி செய்யும் என நம்பலாம்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ன செய்கிறது?இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு மிகவும் குறைந்த அளவே செலவு ஆவதால், ரிலையன்ஸ் பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து எரிபொருளாக்கி ஏற்றுமதி செய்கிறது.


இந்தியாவில் மாற்று எரிபொருளே இல்லையா?பல மாற்று எரிபொருட்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லாததால் எண்ணெயையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. ஆதலால், உபயோகங்களை குறைத்து நாட்டையும், வீட்டையும் வளமாக்க பாடுபடவேண்டும்.

Wednesday, June 25, 2008

இந்த 'வீக்கம்' எப்போது குறையும்?



விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்டாவியுடன் சேர்த்து தூக்கம் கண்களைச் சுழற்றும். அத்தனைச் சிக்கல் கொண்ட வறட்டுச் சமாச்சாரம்தான், ஆனால் அலுத்துக் கொள்ளாமல் தொடருங்கள்.

எப்போதெல்லாம் நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கிறதோ அப்போது விலைகள் கட்டுக்கடங்காமல் போகும். அதிகரிக்கும் பணப் புழக்கத்துக்கேற்ப நாட்டில் பொருட்களின் உற்பத்தி மற்றும் சப்ளை (production and supply) இல்லாத நிலையில் பொருட்களின் விலை ஒன்றுக்குப் பத்து மடங்காகிறது. இதைத்தான் பணவீக்கம் என்கிறோம்.

பங்குகள் மீதான யூக வர்த்தகம், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது, அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்களின் விலை உயர்வது எல்லாமே இந்த சப்ளைக்கும்-தேவைக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைப் பெரிதாக்கி பணவீக்கத்தை வெடிக்குமளவுக்குக் கொண்டு போய்விடுகின்றன.

இந்தியாவில் ஏற்கெனவே 8 சதவிகிதம் இருந்த பணவீக்கத்தை, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மட்டுமே மேலும் 3 சதவீதம் அதிகரி்க்கச் செய்துவிட்டது.

இதற்கு மார்ஷல்ஸ், கீன்ஸ், மார்க்ஸ் என பல்வேறு அறிஞர்களின் விளக்கங்களுக்குப் போனால் விடிந்துவிடும். அதனால் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்.

பணவீக்கத்தை அளவிடுவது எப்படி?:

ரொம்ப சிம்பிள்... தொடர்ந்து ஒரு மூன்றாண்டுகள் நாட்டில் பல்வேறு பொருட்கள் விற்கப்பட்ட விலையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள். இதில் அதிக விலை மாறுதல் இல்லாத ஒரு ஆண்டை 'பேஸ் இயர்' அதாவது நிலை ஆண்டாகக் கொள்ள வேண்டும். மற்ற இரு ஆண்டுகளிலும் ஏற்பட்டுள்ள விலை மாறுதலுக்கும், நிலை ஆண்டு விலைக்கும் இடையில் உள்ள மாறுதல் விகிதம்தான் பண வீக்கத்தின் அளவாகப் பார்க்கப்படுகிறது.

இதனை நுகர்வோர் விலைக் குறியீட்டு முறை கணக்கீடு (கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ்-CPI) என்கிறார்கள்.

வீக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?:

விர்ரென்று ஏறிக் கொண்டேயிருக்கும் பணவீக்கத்தைக் கொஞ்சமாவது கட்டுக்குள் கொண்டு வர, மத்திய ரிசர்வ் வங்கிதான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசின் பணக் கொள்கைகளை வகுப்பதும் நேரம் பார்த்து திறம்பட செயல்படுத்துவம் ரிசர்வ் வங்கியின் கையில்தான் உள்ளது.

ஆனால் அந்த ரிசர்வ் வங்கியிலும் அரசியல் விளையாடிய ஆட்டம் இருக்கிறதே... வெளியே சொன்னால் கேவலம்.

சி.ரங்கராஜன் கவர்னராக இருந்த காலம் வரை ரிசர்வ் வங்கிக்கு தெளிவான பணவியல் கொள்கைகளை நமது அரசு வகுத்துக் கொடுக்கவே இல்லை அல்லது வகுத்துக் கொள்ள விடவும் இல்லை.

இதைப் பின்னாளில் அவரே ஒரு புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

விஷயத்துக்கு வருவோம்...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் உள்ள முதல் ஆயுதம் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை அதிகரிப்பது. இந்த ஆயுதத்தைத்தான் இப்போது கையிலெடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.

அது என்ன ரொக்க இருப்பு விகிதம்?:

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒவ்வொரு வணிக வங்கியும் குறிப்பிட்ட அளவு ரொக்கத்தை ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக இருப்பு வைத்துவிட்டுத் தான் தனது வர்த்தகத்தைக் கையாள வேண்டும். அதைத்தான் ரொக்க இருப்பு விகிதம் என்கிறார்கள்.

இந்த ரொக்க இருப்பு விகிதத்தை பொருளாதார நிலைமைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வசமுள்ள ஒரே சட்டப்பூர்வ ஆயுதம் இந்த ரொக்க இருப்பு விகித கட்டுப்பாடுதான்.

எவ்வளவு உயர்த்தலாம்?:

அதற்காக வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி ஒரேயடியாக உயர்த்திவிட முடியாது.

உதாரணம்: ஒரு வங்கி ரூ.20,000 கோடி வரை வர்த்தகத்தைக் கையாளுவதாகக் கொள்வோம். அதில் ரூ. 1,800 கோடி வரை ரிசர்வ் வங்கியில் ரொக்க இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை, திடீரென பணவீக்கம் அதிகரிக்கும் போது, ரிசர்வ் வங்கி இந்த ரொக்க இருப்பை ரூ. 2,300 கோடியாக அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது வங்கி மூலம் வெளியில் செல்லும் பணத்தில் ரூ.500 கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் வந்துவிடுகிறது. சந்தையில் இருந்து ரூ. 500 கோடி 'உறிஞ்சப்படுகிறது'. ஒரு வங்கி மூலம் மட்டுமே இந்த அளவு பணம் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் (கிளைகள் அல்ல) மூலமும் கட்டுப்படுத்தப்படும் பணத்தின் அளவு எவ்வளவு பாருங்கள்...

இப்போது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?:

மத்திய ரிசர்வ் வங்கி இம்முறை முன் தேதியிட்டு 8.75 சதவிகிதமாக சிஆர்ஆரை உயர்த்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 26 முதல் 5 கட்டங்களாக புதிய சிஆர்ஆர் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

ஏப்ரல் 26 முதல் மே 10 வரையிலான 15 நாட்களுக்கு 0.25 சதவிகிதம், மே 11 முதல் 25 ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கு 0.25 சதவிகிதம் என இரண்டரை மாதங்களுக்கு மொத்தம் 0.50சதவிகித அளவுக்கு ரொக்க இருப்பு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி 8.25 சதவிகிதத்திலிருந்து 8.75 சதவிகிதமாக சிஆர்ஆர் உயர்கிறது.

பொதுவாக இம்மாதிரி நேரங்களில் மத்திய அரசு இன்னொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். அது பொருட்களின் உற்பத்தியையும், சப்ளையையும் அதிகரிப்பது மற்றும் அநாவசியச் செலவுகளைக் குறைப்பது.

உலகில் எந்த நாட்டாலும் உற்பத்தியை நினைத்தவுடன் எல்லாம் அதிகரித்துவிட முடியாது. இதனால் இரண்டாவது option-யை கையில் எடுத்தார் பிரதமர்.

செலவை குறையுங்கள், வெட்டியாய் வெளிநாடு போகாதீர்கள் என்று அமைச்சர்களுக்கும், காரையும் லைட்டையும் தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள் என டி.வி மூலம் கவலை தோய்ந்த முகத்துடன் நமக்கும் அறிவுரை சொன்னார் பிரதமர்.

ஆனால், இந்த அறிவுரையை யாரும் சீரியசாக எடுக்க மாட்டார்கள் என்று பிரதமருக்கு தெரியாதா என்ன.. இதனால் தான் அடுத்த சீரியஸ் option-ஆன பணப் புழக்கத்தின் அளவை கட்டுப்படுத்தும் அஸ்திரத்தை பயன்படுத்தியுள்ளார், ரிசர்வ் வங்கி மூலமாக.

இதன் மூலம் வங்கிகள் வசம் உள்ள பணத்தில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி முடக்கிவிட்டது.

இதனால் வங்கிகள் தங்கள் பங்குக்கு, வட்டி விகிதத்தை தாறுமாறாக உயர்த்தும். வீட்டுக் கடன்கள், நுகர்வோர் கடன்கள் போன்றவற்றுக்கான முன்னுரிமை குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும்.

அல்லது, உயர்ந்துவிட்ட வட்டியைப் பார்த்து நாமாகவே கடன் வாங்குவதைக் குறைத்துக் கொள்வோம். இன்றைக்கு மாதச் சம்பளக்காரர்களின் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் எல்லாம் சம்பளப் பணத்தில் மட்டுமே வாங்கியவையென்று கூற முடியுமா... அவையெல்லாமே பல்வேறு நுகர்வுக் கடன்கள்தானே, பொருட்களாக மாறி இடத்தை அடைத்துள்ளன.

இந்த கடன் வசதி நின்று போனால் தானாகவே வாங்கும் சக்தியும் நின்றுபோகும் அல்லவா... அப்போது பொருட்களின் சப்ளையும் , வெளியில் புழங்கும் பணத்தின் அளவும் சமநிலைப்படும். விலையும் ஒரு கட்டுக்குள் வரும்.

இந்த நிலை தான் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம்.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது ஒரு வகை முதலுதவி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்... ஆனால் இதுவே நிரந்தரத் தீர்வல்ல.

ஆனால், உண்மையில் நிரந்தரத் தீர்வுகளும் நிறையவே உள்ளன. அதற்குத் தேவை 'பொலிட்டிகல் வில்' என்பார்களே அந்த சமாச்சாரம்.

இந்தியாவிலாவது பண வீக்கம் 11.05 சதவீதம். சீனாவில் இன்றைக்கு பணவீக்கத்தின் அளவு மிக மிக அதிகம், அதாவது 15 சதவிகிதம். ஆனல் அவர்களது பொருளாதாரம் முடங்கி விடவில்லை. கடந்த ஜனவரி மாதம் விண்ணுக்குப் போன விலைகள் இன்று மெல்ல தரையைத் தொடும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

காரணம் அந்த நாடும் அரசும் காட்டும் 'பொலிடிக்கல் வில்'.. அது என்னப்பா வில்.. அம்பு என்கிறீர்களா...

உங்களுக்கு இப்போதே 'கண்ணை கட்டியிருக்கும்'..

(கட்டுரையாளர் -ஷங்கர்)

Sunday, June 22, 2008

புத்தக சுமையால் முதுகு வலிக்குள்ளாகும் மழலைகள்!

நாட்டில் உள்ள பள்ளிக் குழந்தைகளில் 55 சதவிகிதம் பேர் முதுகுவலியால் அவதிப்படுவதாக அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இன்றைக்குப் படிப்பு என்ற விஷயம் மிகவும் காஸ்ட்லியானது மட்டுமல்ல, சுமை மிகுந்ததாகவும் மாறி வருகிறது.

குறிப்பாக மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அதிக அளவு புத்தகச் சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான வெல்எட், தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தனியார் பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு எல்கேஜி குழந்தை தன் சராசரி உடல் எடையான 16 கிலோவில் பாதிக்கு மேல் எடைகொண்ட புத்தகங்களைச் சுமக்கிறதாம். அதாவது 16 கிலோ எடை கொண்ட குழந்தை சுமக்கும் புத்தகச் சுமையின் அளவு 8 கிலோவுக்கும் அதிகமாம்!

அதேபோல 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் அல்லது சிறுமி சராசரியாக தங்களது லஞ்ச் பேக்கையும் சேர்த்து சுமார் 25 கிலோ எடை அளவுக்கு சுமைகளைச் சுமக்க வேண்டியுள்ளதாம்.

இதன் காரணமாக குழந்தைகள் இளம் வயதிலேயே உடலில் சமநிலையை இழந்து, படிப்பில் கோட்டை விடும் நிலை ஏற்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இளம் மாணவ மாணவிகள் 5 வயதிலிருந்தே முதுகு வலிக்கு ஆளாவதாகவும் தெரிய வந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் பயிலும் 5 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளில் 55 சதவிகிதம் பேர் முதுகுவலி, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் அவதிக்குள்ளாகின்றனர். அதிகாலையிலேயே பள்ளிக்குச் செல்வது, மாலையில் விளையாடக் கூட நேரமின்றி ட்யூஷன் படிப்பது போன்ற காரணங்களால் சரிவர சாப்பிட முடியாமல் இத்தகைய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசு பள்ளிகளிலும்...

முன்பெல்லாம் அரசுப் பள்ளிகளில் இந்த நிலை அவ்வளவாக இல்லாமல் இருந்தது. காரணம் அந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி. போன்ற ஆரம்ப நிலை வகுப்புகள் கிடையாது. ஆனால் இப்போது நகரம் சார்ந்த பல அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளைப் போலவே கிண்டர் கார்டன் வகுப்புகளையும் நடத்தத் தொடங்கியிருப்பதால் அங்கும் 30 சதவிகித குழந்தைகள் இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கான்பூரைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஜாயின் கேர் கிளப் நடத்திய ஒரு ஆய்வில் அரசுப் பள்ளிகளில் 30 சதவிகிதம் குழந்தைகளும், தனியார் பள்ளிகளில் 63 சதவிகிதம் குழந்தைகளும் முதுகு வலி, மந்த நிலை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, பிரபல குழந்தை நல சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திரசேகரன் கூறியதாவது:

நான் அரசுப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்துதான் படித்தேன். எனக்கு படிப்பு எப்போதும் சுமையாய் தெரிந்ததில்லை. என் தாய் தந்தையர் காஞ்சிபுரம் அருகே சாதாரண விவசாய குடும்பம்தான். ஆனால் இன்றைய கல்விச் சூழல் எக்ஸ்ட்ரா கேர் எனும் பெயரில் குழந்தைகளைப் புத்தகப் பொதி சுமக்கும் மாடுகளாக்கிவிட்டது.

ஏதோ தமிழகத்தில் மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல இது. நாடு தழுவிய தேசியப் பிரச்சினை. முன்பு ஆர்.கே.நாராயணன் ராஜ்யசபாவில் பேசும் போது, குழந்தைகளுக்கு குறைவான புத்தகங்கள் மற்றும் எழுதும் உபகரணங்கள் கொடுப்பது குறித்து ஒரு தனிநபர் மசோதா கொண்டுவந்தார்.

அதனை அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும் புற்றீசல்கள் போலப் பெருகி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தங்களுக்கென்று ஒரு சுய தர நிர்ணயத்தை வைத்துக் கொண்டு மாணவர்களைப் பொதி சுமக்க வைக்கின்றன. இந்த நிலை மாறத்தான் வேண்டும், என்கிறார்.

வருங்காலத் தூண்களின் முதுகொடிக்கும் இந்தக் கொடிய நிலைக்கு மத்திய மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்குமா?

Courtesy : thatstamil

Kapil the Great!



இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்... டர்ன்பிரிட்ஜ் வெல்ஸ் என்ற சிறு நகரத்தை யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. இங்கிலாந்தின் கென்ட் நகருக்கு அருகே உள்ள அந்த கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பகுதியை, லண்டன்வாசிகள் வார விடுமுறைகளைக் கழிக்கும் ஓய்விடமாகப் பயன்படுத்திவந்தனர்.

1983ம் ஆண்டு அந்த சின்ன நகரை கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு மாநகரமாக மாற்றினார் ஒரு மாவீரர்.

அவர்தான் கபில்தேவ் நிகாஞ்ச்.

புரூடென்ஷியல் உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த ஒரே இந்திய கேப்டன். 300 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர் கபில்தேவ்.

1983, ஜூன்-18-ம் நாள் இந்திய அணியின் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அணிப் பற்று, மன உறுதி, ஆர்வம், கடின முயற்சி என நல்ல வார்த்தைகள் அனைத்துக்கும் இலக்கணம் வகுத்த பொன்னாள் அது.

இந்திய - ஜிம்பாப்வே அணிகள் மோதும் அந்தப் போட்டியின் வெற்றிதான், அரை இறுதிப் போட்டிக்கான தகுதியை நிர்ணயிக்கும் என்ற நிலையில் இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்துக் களமிறங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்து இந்திய அணி. 9 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்து 4 வீரர்கள் பெவிலியன் திரும்பினர். அப்போதுதான் பெவிலியனைத் திரும்பிப் பார்த்தபடி 6-வது பேட்ஸ்மேனாக மைதானத்துக்குள் நுழைகிறார் கபில். மேலும் 8 ரன்கள் சேர்வதற்குள் 5வது விக்கெட் விழ, அவ்வளவுதான் இந்திய அணியின் கதை முடிந்தது என்று சக வீரர்கள் சோகத்துடன் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்தனர்.

'ஹரியானா ஹரிக்கேன்' கபில் மட்டும் பயப்படவில்லை. அசரவில்லை. ஜிம்பாப்வே பந்துகளைப் பார்த்து திகைக்கவுமில்லை. தன் பாணியில் வெளுத்துக் கட்டினார். இத்தனைக்கும் அந்தப் பிட்சில் வேகப் பந்துகள் அநியாயத்துக்குப் பவுன்ஸ் ஆகி எப்போது வேண்டுமானாலும் ஸ்டம்புகளைப் பதம் பார்க்கும் ஆபத்து வேறு.

ஆனால் வெறும் 24 வயது நிரம்பிய கபிலின் தேர்ந்த ஆட்டம் ஜிம்பாப்வே பந்துகளைச் சிதைத்தது. வெறும் 80 பந்துகளில் சதமடித்தவர், மேலும் 58 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். 138 பந்துகளில் கடைசிவரை அவுட்டாகமால் அவர் எடுத்த ரன்கள் 175. இதில் 24 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார் கபில். இன்றைக்கு ஆடுகிறார்களே 20 ஓவர் கிரிக்கெட், அதை அன்றைக்கே விளையாடி விட்டவர் கபில்.

பெவிலியனில் நின்று கொண்டிருந்த இதர இந்திய வீரர்களின் முகங்களில் ஈயாடவில்லை. நின்ற இடத்திலிருந்து கொஞ்சமும் அசையாமல் அப்படியே சிலை மாதிரி நின்று கொண்டிருந்தனர். கபிலுக்கு எதிர்முனையில் கடைசிவரை அவருக்கு கம்பெனி கொடுத்து ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டவர் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி (24).

60 ஓவர்களில் 266 ரன்களைக் குவித்தது இந்திய அணி, கபில் தயவில். பின்னியும் (22) மதன்லாலும் (17) கபிலுக்கு பெரும் பலமாக நின்றனர் அந்த இன்னிங்ஸில்.

'கபில் எங்களிடம் சொன்னது ஒரே விஷயம்தான். நேராக வரும் பந்துகளைத் தடுத்து ஆடுங்கள். ஒரே ஒரு ரன் எடுத்து எனக்கு கார்ட் கொடுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். நானும், பின்னியும், மதனும் செய்தது அந்த ஒரு வேலையைத்தான். மற்ற எல்லாம் கபில் செய்த மாயாஜாலம்...' என்கிறார் மலரும் நினைவுகளில் மூழ்கிப் போய் கண்கலங்கும் கிர்மானி.

ஜிம்பாப்வே ஆட்டத்தைத் துவங்கியது. ஒரு முனையில் கபில், மறுமுனையில் மேஜிக் பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி... அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர். ஜிம்பாப்வே வீரர்கள் அடித்து ஆடத் தொடங்கியபோது, மதன் லாலையும், பல்வீந்தர் சிங் சாந்துவையும் மீடியம் பேஸ் போட வைத்தார் கபில். அடுத்த மூன்று விக்கெட்டுகள் காலி. ஸ்லோ மீடியம் பேஸர் அமர்நாத் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இடையில் இரண்டு ரன் அவுட்கள்.

'கபில்ஸ் டெவில்ஸ்' வெற்றிக் கனியை 31 ரன்கள் வித்தியாசத்தில் ருசித்தனர்.

அந்த ஒரே நாளில் இங்கிலாந்து மொத்தமும் பரபரத்துவிட்டது. உலகெங்கும் கபிலின் சாதனை பற்றித்தான் பேச்சு. துரதிருஷ்டவாசமாக, அன்றைக்கு பிபிசி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டிருந்ததால் அந்தப் போட்டியை ஒளிபரப்ப முடியவில்லை. வெறும் ரேடியோ கமெண்டரி, பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படங்கள் மட்டும்தான்.

அடுத்து வந்த அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை (அப்பெல்லாம் கிரிக்கெட்டின் 'தாதா'வாக ஆஸ்திரேலியா வளர்ந்திருக்கவில்லை) புரட்டி எடுத்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கபில் அணி. அதில் ரோஜர் பின்னியும், மதன்லாலும் அதிஅற்புதமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரிச்சர்ட்ஸின் புகழாரம்

இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இந்திய அணி வெற்றி கொண்ட கதையை யாரும் மறந்திருக்க முடியாது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்: அந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிப் பயணத்தைத் தடுத்தது கபில்தேவ்தான். அந்த ஒரு காட்சை (ரிச்சர்ட்ஸ் அடித்த பந்து) மட்டும் அவர் விட்டிருந்தால் 1983 கோப்பை எங்களுக்குத்தான். எங்கிருந்து ஓடிவந்தார், எப்படி அந்தக் கேட்சைப் பிடித்தார் என்று இப்போதும் எனக்குப் புரியவில்லை. ஒரு கேப்டனாக சக வீரர்களை அவர் வழி நடத்திச் செல்லும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ரோஜர் பின்னி, மதன்லால், அமர்நாத், சாந்து என அன்றைக்கு அவருடனிருந்த எல்லா வீரர்களிடமும் நான் கபிலைத்தான் பார்த்தேன். கபில் என்ற ஹீரோவுக்கு பெரிதும் துணை நின்றவர்கள் இந்த நால்வரும்தான். சொல்லப்போனால் பந்து வீச்சாளர்கள் சேர்ந்து பறித்த வெற்றிக் கனி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை... இப்போது சொல்கிறேன்.

இந்தியாவிடம் தோற்றுப் போனோமே என பல ஆண்டுகள் வரை நான் மனம் வருந்தியிருக்கிறேன். ஆனால் கபில் போன்ற ஒரு ஜீனியஸ் தலைமையில் விளையாடிய ஒரு திறமையான அணியிடம் தோற்றதில் எந்த வெட்கமும் இல்லை எங்களுக்கு. சர் என்ற உயரிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டிய மாவீரர்தான் கபில்...'

கேவலப்படுத்தும் கிரிக்கெட் வாரியம்!

ஆனால் அந்த மாவீரரை கௌரவப்படுத்துவதற்குப் பதில் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட்டில் கபில் செய்த மாபெரும் சாதனைகளுக்காக பிரிட்டிஷ் அரசு கபிலுக்கு சர் பட்டம் வழங்க யோசித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், அவரை இந்தியக் கிரிக்கெட்டிலிருந்தே ஒதுக்கி வைத்தும், மொகாலி மைதானத்திலிருந்த அவரது படங்களைக் கிழித்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் வாரியம்.

இந்த 35 ஆண்டுகளில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று பெருமை சேர்த்த ஒரே கேப்டன் கபில் மட்டுமே. காரணம் அவரது அணிப்பற்றும் அயராத உழைப்பும். அவரது சாதனைக்கு இன்று வெள்ளி விழா.

இனியும் காலம் தாழ்த்தாது ஒரு கண்ணியவான உரிய முறையில் கவுரப்படுத்த கிரிக்கெட் வாரியம் முன் வரவேண்டும். அதுதான் இந்திய கிரிக்கெட்டுக்கே கவுரவம்!

Friday, June 20, 2008

Salute Bravery..


Late Mr. Surjan Singh Bhandari

N.S.G. Commando

During The Attack on Akshardham temple on 24th September 2002 this Brave Man fought the greatest battle of his life. Yes he was the N.S.G. Commando Late Mr. Surjan Singh , who sacrificed his life for the Nation. Sadly On 19th May 2004 he lost the Toughest an d Longest battle against life exactly after 600 Days being in Coma, he lost this life.

The Bullet which hit him in the head made him Unconscious for almost 600 days. His family members were hoping that one day their Hero will open his eyes but he didn't.

It was the Longest Wait for the family members of this Brave Man. When the whole India was busy in Guessing Who will be the Next PM of the country - Will it be Sonia or will it be Manmohan Singh, This man was fighting his Last battle. But it's so sad that in the hype of all the Political Drama, the News about his Death was Lost like a needle in a hay stack! Even the leading News Papers & So Called Best News Channels of India which Works on 24 X 7 basis, failed to highlight this story of the Brave Man. Unfortunately it was mentioned somewhere on the middle page of some newspaper.....This was the Reward for the Brave task for which he lost his life.

Besides his Family members, only one thing was there with him during those toughest 600 days. It was there near his bed till the last Moment. Can you guess what it was?............... It was the "Tiranga", yes! Our National Flag, which was saluting him for his Great cause. Absolutely No words can suffice our Gratitude towards him...

If news papers refuse to cover, TV channels refuse to cover, let us do our bit.

Please forward this mail to as many people as you can.

This is the only way we can salute his Bravery..

Friday, June 13, 2008

கையேந்திகளாக்க போட்டியிடும் அவலம்!:

சில தினங் கள் மழை பொழிந்தால், நாட்டிற்குப் பேரிடரா, பேரிழப்பா, நன்மையே ஏதுமில்லையா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் மழை பெய்தால், அதை ஒரு பெரிய விபத்து போல சித்தரித்து, செய்திகள் வெளியிடப்படுகின்றன. பெய்யும் மழையையும், மக்களின் அறியாமையால் அரசியலாக்க முயற்சிக்கின்றனரே. உலகில் குறைந்த அளவு மழை பெய்யும் பகுதிகளில் தமிழகமும் ஒன்று. ஜீவநதியும் கிடையாது. குடிநீர் பற்றாக்குறைக் கே, கடல் நீரைக் குடிநீராக்க வேண்டிய கட்டாய நிலை.கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக, ஓரளவு தமிழகத்தில் மழை பெய்கிறது. ஆனாலும், சில மாவட்டங்களில், வழக் கத்திற்குக் குறைவாகவே மழை பெய்துள்ளது. இச்சூழலில், மழை பெய்வது பெரிய கேடு போலவும், மழையால் பெரிய இழப்புகள் மட்டுமே உண்டாவது போலவும், உருவகப்படுத்துவது நன்மை தருமா? இது அறியாமையின் சின்னமா அல்லது சுயநலத்தின் வெளிப்பாடா? சிறு இழப்புக்களைச் சந்தித்தாலும், மழையால் மக்கள் பெறுவது, பெரும் நன்மையே என்பது யாரு மே அறியாத ஒன்றா? தனிநபருக்கு உதவித் தொகை வழங்கக் கோருவதில் மட்டுமே அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், நீர் மேலாண்மை திட்டங்கள் சரியான முறையில் நிறைவேற்றினால், தனிநபருக்கும் நாட்டிற்கும் தொடர்ந்து இழப்பு ஏற்படாமல் தடுக்க இயலும். நாட்டின் வேளாண் மேலாண்மைக்கு வழி தேடலாம்.காவிரி பெருகி, நாட்டைச் சேதப்படுத்திய பின், கடலில் கலந்து வீணாகிய வெள்ளத் தைத் தடுத்து, கி.பி., முதலாம் நூற்றாண்டில் கல்லணை கட்டி நெடுவயல் நீர் பாய்ச்சி, "சோழவளநாடு சோறுடைத்து' என, இன்றளவும் பெருமை கொள்ளச் செய்தவன் மன்னன் கரிகால்வளவன். எனவே கட்டடக்கலை, நீர் மேலாண்மைக் கலைகளில் பன்னெடுங்காலமாகத், தலைசிறந்து விளங் கியது நமது தமிழினம். இன்று மழையைக் கண்டால் பேரிடராக கருதுவோராக மாறிவிட்டோமே. என்னே நம் அறியாமையின் வளர்ச்சி!"நீர் மேலாண்மை' பாடமாக மாணவர்களுக்கு தற் போது போதிக்கப்படுகிறது. மழை பொழிந்தால் விரைந்து செயலாற்ற வேண்டியவை வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்பாசனத் துறைகளே. ஆனால், அறியாமையில் சிக்கித்தவிக்கும் மக்களின் திசை மாறிய கூக்குரலால், இத்துறைகள் தேவையான தொலைநோக்கில் செயல்பட இயலவில்லை, போதுமான முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை. மாறாக, வருவாய்த் துறையை செலவுத் துறையாக செயல்படச் செய்து, மக்களைக் கையேந்திகளாக்குகின்ற முயற்சிகளிலேயே, அரசியல் கட்சிகளும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுகின்றன."மழை' மக்களுக்கு இறைவன் வழங்கும், "கொடை!' அதைச் செவ்வனே பயன் படுத்திக் கொள்ள வேண்டியது நமது "கடமை!' ஆகவே, மழை பெய்யும் காலத்தில் தற்காலிக உதவித் தொகை வழங்க வலியுறுத்துவதிலேயே, அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் அதிக கவனம் செலுத்தாமல், அச்சிறு இழப்பை விவசாயிகளே சரிகட்டிக் கொண்டு, தொலைநோக்கு நீர் மேலாண் மைத் திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.அதற்கு சட்டசபையில் கட்சி மாச்சரியமின்றி, வேளாண்மை உற்பத்தி, நீர் மேலாண்மை தொழில் நுட்பம் சார்ந்து விவாதித்து, தமிழகத்தை நீர்மேலாண்மையில் மீண்டும் தலைசிறந்ததாக்கத் தக்க முயற்சிகள் மேற் கொள்ளுதலே நாட்டுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை தரும். தங்களுக்குள் அரசியல் செய்து கொள்ளவும், மக்களை திசை திருப்பவுமே சட்டசபை உறுப்பினர்களை, மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டிய காலம் இது.

Courtesy : வெ.சிவசுப்பிரமணியன், ஆட்சி அலுவலர் (ஓய்வு), செரியன் நகர், சென்னை

Wednesday, June 11, 2008

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்!

இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது குற்றம் என சட்டம் கூறினாலும் பல இடங்களில் அவற்றை முறையான நடைமுறைப்படுத்துவதில்லை. உலக அளவில் 16 கோடிக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "கல்வியே குழந்தை தொழிலாளர் முறைக்கு தீர்வு' என்பது இந்த ஆண்டின் கோஷமாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு முறையாக அடிப்படை கல்வி கிடைக்காவிட்டால் எதிர்கால வாழ்வும் கேள்விக்குறியாகிறது. குழந்தை தொழிலாளர்கள் உருவாக வறுமை தான் முக்கிய காரணம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமெனில் கட்டணம், பாடப்புத்தகங்கள் மற்றும் இதர செலவுகளை பல குடும்பங்களால் சமாளிக்க முடிவதில்லை. ஏழைக்குழந்தைகள் இலவசமாக படிக்கும் அரசுப்பள்ளிகள் வசதிகள் குறைவாகவும், பராமரிப்பு இன்றியும் உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது. 2015ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும் ஐ.நா., இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதனால் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாகவே ஒழித்து விட முடியும் என நம்பப்படுகிறது. இதற்காக கீழ்க்கண்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

- இலவசமான கட்டாயக்கல்வி
- பெண் குழந்தைகளின் கல்விக்கான தடைகளை அகற்றுவது
- பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, தரமான கற்கும் சூழ்நிலையை உருவாக்கித்தருவது
- முறையான தொடக்க கல்வியை இழந்த குழந்தைகளை கண்டறிந்து எழுத்தறிவிப்பது
- ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நீக்கி முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது
- குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டங்களை சர்வதேச அளவில் எல்லா நாடுகளும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது
- வறுமையை எதிர்கொள்ள வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது
- குழந்தை தொழிலாளர் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல்
கல்வி கற்கும் உரிமை அடிப்படை மனித உரிமையாக உள்ளது. பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கியவர் தங்களை உயர்த்திக்கொள்ள ஒரே வழி கல்வியே. குறைந்தபட்சம் 14 வயது வரையாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுவதும் இதனால் தான். தனிநபர் மற்றும் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கு குழந்தை தொழிலாளர் முறையால் இழப்பு என்பதை பின்தங்கிய நாடுகளும் உணரத்தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Dinamalar

WAR






















Management Course

TWO MINUTE MANAGEMENT COURSE


Lesson One :

An eagle was sitting on a tree resting, doing nothing. A small rabbit saw the eagle and asked him, "Can I also sit on my ass like you and do nothing?"
The eagle answered: "Sure, why not."
So, the rabbit sat on the ground below the eagle, and rested. All of a sudden, a fox appeared, jumped on the rabbit and ate it.

Management Lesson: To be sitting on your ass and doing nothing, you must be sitting very high up.


Lesson Two :

A turkey was chatting with a bull. "I would love to be able to get to the top of that tree," sighed the turkey, "but I haven't got the energy."
"Well, why don't you nibble on some of my manure droppings?" replied the bull. "They're packed with nutrients."
The turkey pecked at a lump of manure, found it actually gave him enough strength to reach the lowest branch of the tree. The next day, after eating some more dung, he reached the second branch. Finally after a fourth night, he was proudly perched at the top of the tree.
Soon he was promptly spotted by a farmer, who shot the turkey out of the tree.

Management Lesson: Bull Shit might get you to the top, but it won't keep you there.


Lesson Three :

A little bird was flying south for the winter. It was so cold the bird froze and fell to the ground in a large field. While it was lying there, a cow came by and dropped some dung on it. As the frozen bird lay there in the pile of cow dung, it began to realize how warm it was.
The dung was actually thawing him out. He lay there all warm and happy, and soon began to sing for joy.
A passing cat heard the bird singing and came to investigate. Following the sound, the cat discovered the bird under the pile of cow dung, and promptly dug him out and ate him.

Management Lessons:

(1) Not everyone who shits on you is your enemy.
(2) Not everyone who gets you out of shit is your friend.
(3) And when you're in deep shit, it's best to keep your mouth shut!


This ends your two-minute management course.