Thursday, October 29, 2009

எம் இனமே..எம் சனமே…..இனி என் செய்வாய்?

உலகில் இன்றைய நாளில் மூன்று இடங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு நின்றிருக்கும் ஈழத்தமிழர்களை யாரும் தமது நாடுகளில் சேர்த்துக்கொள்ளத் தயாராய் இல்லை.!

முதலில் இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஏதிலிகளின் படகு ஒன்று இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது………எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் ஒரு சிறு பெண். இந்தோனேசியாவின் அரசாங்கமும் கூட அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை.

மற்ற நாடுகளின் குப்பையைக்கொட்டும் இடமாக எங்கள் நாட்டை உபயோகப்படுத்த முடியாது என்றே இந்தோனேசியா அறிவித்திருக்கிறது.

அவர்கள் மனிதர்கள்…இரத்தமும் , சதையுமாக வாழும் மனிதர்கள்…நேற்றுவரை சொந்த இடத்தில் சுகமாய் வாழ்ந்த மனிதர்கள்…..குப்பைகளல்லர்…நினைக்கையிலேயே நெஞ்சு கொதிக்கிறது.

அந்தப் படகில் இருக்கும் 266 பேரும் நானும் ஒரே இனம்…ஒரே மொழி பேசுபவர்கள்.

அடுத்து கனடாவில் ஓஷன் லேடி கப்பலின் மூலமாக கனடா வின் கடல் பரப்பில் கைது செய்யப்பட்ட ஏதிலிகள்…..

கைகளை , கால்களை சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் நிற்க வைத்தார்களாம் அங்கே……….இன்னமும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்களில்லை……..நாடின்றி , சிறைச்சாலையில் வாடுகிறார்கள் அந்தத் தமிழர்கள்…அவர்களும் நாமும் ஒரினம்..!

பிரிதொன்று…..

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சமடைந்த 78 தமிழர்களின் அரசியல் தஞ்சத்தை நிராகரிக்கப் போவதாகவும் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போவதாகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ருட் அறிவித்திருக்கிறார். அவர்களை இலங்கைக்கு அனுப்பினால் என்ன ஆகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

உலகில் எங்கேயுமே ஈழத்தமிழர்கள் வேண்டாதவர்களாகிப் போனார்கள்…அவர்கள் கேட்கும் அரசியல் தஞ்சம் கூட அனுமதிக்கப்படாமல் அனாதைகளாக்கப்பட்டு விட்டார்கள்….!

அவர்கள் செய்த பாவம்தான் என்ன?

நாங்களும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று கேட்டது மட்டும் தானே?

எங்களின் பூமியை நாங்களே ஆட்சி செய்து கொள்கிறோம் என்றது மட்டுந்தானே?

அதற்காகவா இந்த உலகம் இப்படி அவர்களைத் தண்டித்தது?

காடுகளில் , மழைகளில் கால்கடக்க நடந்து , செடிப்புதர்களின் நடுவில் ஒளிந்து , தாலியை , சொந்தமான பூமியை விற்று அதைக் காசாக்கி படகுக் காரர்களிடம் கொடுத்து வேறொரு ஊருக்கு அரசியல் தஞ்சம் கோருவது எதனால்?

இலங்கை இராணுவம் கண்டால் தம் கதி அதோ கதிதான் என்று தெரிந்தும் ப்டகுகளில் அவர்கள் குடும்பம் குடும்பமாக செல்வது எதனால்?

சொர்க்க வாழ்க்கை அனுபவிக்கவா? கேளிக்கைகளில் வாழ்க்கையைக் கழிக்கவா? இல்லையே….சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை…தாங்கள் காக்கை குருவிகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்ற எண்ணத்தில் தானே? உயிர்ப்பயத்தில் தானே ?

இனிமேல் தன் சொந்த நாட்டில் தன்னால் வாழவியலாது என்ற காரணம் தானே?

அடேய் , என் இனத்தையாடா குப்பையென்றாய்? என் சனங்களையாடா ஆடுமாடுகளைப் போல் திரும்பிப் போ என்றாய்……? என் சனமே , வா வந்து என் பூமியில் வாழு என்று திமிர்க்குரலில் சொல்ல தமிழகத்தானுக்குத் தான் தைரியம் உண்டா ? தமிழகத்தை ஆள்பவனுக்குத் தான் திராணி உண்டா? அக்கறை உண்டா?

அதுசரி , தமிழகத்தான் எங்கே தன் பூமியை ஆள்கிறான்? சுதந்திரம் பெற்றது முதலாய் செங்கோட்டையின் அடிமைதானே அவன்? ஒரு அடிமை எப்படி அகதிகளை ஆதரிக்க இயலும்…? ஆனால் அவர்கள் அகதிகள் மட்டுமே…அடிமைகளல்லர்..!

பரணி , புறநானூறு இவையெல்லாம் போற்றி வளர்த்தோம்…….
அதனால் புண்ணியம் என்ன கண்டோம்?
இன்றோ போக்கிடம் இன்றித் திரிகிறோம்…யார்க்கும்
இனி நாங்கள் வேண்டாதவர்களாகிப் போனோம்………! சீக்கிரம்
இன்னொரு சுனாமி வந்து சூறையாடிப் போகட்டும்…
இருக்கும் இன அடையாளங்கள் இல்லாது போகட்டும்…!

என் இனமே…என் சனமே.
என்ன செய்து இனி
எம் உடமை காப்பாய்?

என் இனமே..என் சனமே.
என்ன செய்து இனி
எம் பெருமை சேர்ப்பாய்?

என் இனமே..என் சனமே..
என்ன செய்து இனி
எம் நிலத்தை மீட்பாய்?

என் இனமே…என் சனமே..
என்ன செய்து இனி
எம் மக்களைக் காப்பாய்?
வேதனைத் தீயினை அணைப்பாய்?

- நன்றி பாரிஸ்தமிழ்.காம்

Friday, October 23, 2009

விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை!

என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி (!) அடைகிறேன். உங்கள் ஒவ்வொருவருடனும் நான் பல விஷயங்கள் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கலாம். ஆனால் இந்த பதிவு உங்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதற்கான சிறு முயற்சியே!

நம் பேச்சு ,நம் எண்ணம் ,நம் செயல் மற்றும் எதிர்காலம் . இவை அனைத்திலும் "தமிழ்" என்ற மொழி இரண்டற கலந்துள்ளது.ஆனால் இந்த மொழி பேசுகிற ஒரே காரணத்திற்காக நம் இனமே இந்த நாகரிக உலகத்தால் அழிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரண காரியங்கள் பிறகு ஆராய்வோம். இன்றைய கால கட்டத்தில் தமிழ் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பரந்து பட்டு இருக்கிற நாம் நம் கடமை என்ன என சிந்திப்போம்.

ஈழ குழந்தைகளின் அழுகையும் கண்ணீரும் நம் உறக்கத்தை கலைக்கிறதே இதன் தீர்வு தான் என்ன? இன்று ஈழ தமிழன். நாளை இந்திய தமிழன்! இது தான் வித்தியாசம்.

"நம்மில் பலருக்கும் தமிழன் என்ற உணர்வு இல்லை. அங்கே தமிழ் என்றால் உயிரே இல்லை." மூன்று கோடி சீக்கியனுக்கும் ஒரு இரண்டு கோடி மலையாளிக்கும் உள்ள உரிமை நமக்கு இல்லாமல் போனதன் காரணம் என்ன?

உங்களை போலவே இலங்கை தமிழனின் அவலம் என் உறக்கத்தை கெடுத்து கொண்டு தான் உள்ளது. இந்த தேசமும் அரசியலும் இன்னும் எத்தனை தமிழனை பலி கொள்ள போகிறது .

நீ மதுரை - நான் நெல்லை! நீ நாடார் - நான் நாயக்கர்! நீ ஆத்திகன் - நான் நாத்திகன் என்ற வேறுபாடு மறந்து நாம் தமிழன் என்ற உணர்வுடன் ஒன்று கூட இதை விட ஒரு தருணம் வேண்டுமா நண்பனே?

ஆதலால் ஒன்று படுவோம் நண்பர்களே. நண்பர்களாய் மட்டும் அல்ல. தமிழனாகவும் !)
உங்களில் யாவரேனும் இந்த மன நிலையில் இருந்தால் வாருங்கள். புதிய எழுச்சியை உருவாக்குவோம். தமிழன் என்ற தேசிய இனம் மற்றும் அவன் குணங்களை இந்த உலகுக்கு உணர்த்துவோம்.இது யாரையும் தாக்குவதற்கு அல்ல. நம்மை நாம் தற்காத்து கொள்ள.

நான் இங்கே பல நண்பர்களை சந்தித்து விவாதித்து உள்ளேன்.அவர்கள் அனைவரின் எண்ணங்களும் ஒன்று தான். "நாம் ஏதாவது செய்ய வேண்டும் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பது தான் அவர்கள் பதில்." மேலும் இதன் தொடர்பில் சென்னை சென்று சில புதிய நண்பர்களையும் சந்திக்க உள்ளேன். அதன் விவரங்களை பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை நீங்கள் உங்கள் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் எனக்கு தெரிவியுங்கள். ஏனெனில் நீண்ட விவாதங்களே ஒரு நல்ல செயற்பாட்டின் தொடக்கமாக இருக்க முடியும்.

Thursday, October 15, 2009

உலகம் முழுவதும் பட்டினியில் 100 கோடி மக்கள்!


உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவிக்கிறது.

ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில், உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர் [^]கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.

உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.

சோமாலியாவில், வன்முறை [^]யும், உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டாலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டாலராக உள்ளது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நெடு நாட்களாகி விட்டது. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தை [^]களில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.

விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது.

1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளனர்.

Tuesday, October 6, 2009

கவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக!




கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
……….

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

Monday, October 5, 2009

உங்கள் ஜிமெயில் பாதுகாப்பாக உள்ளதாஉங்கள் கூகிள் மெயில் பிறரால் பயன்படுத்த படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள.

உங்கள் கூகிள் மெயில் அக்கௌன்ட் பிறரால் பயன்படுத்த படுகிறதா என்பதை எளிதில் தெரிந்து கொள்ள வழி:

நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .

மெயில் முக்கிய தகவல்கள் கொண்டிருக்கும் போது நமக்கு யாராவது இத்தனை உபயோக படுத்துகிறார்களா ,பாதுகாப்பாக உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும் .

இதோ தெரிந்துகொள்ளும் வழி :

உங்கள் கூகிள் மெயில் ஓபன் செய்து inbox கீழே இருக்கும் இந்த details பட்டனை அழுத்துங்கள்.



உங்கள் ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய ஐந்து உபயோக விபரங்களைகாட்டும் கீழ்க்கண்டவாறு காட்டும் .



இதில் நேரம் , தேதி ,ஐ,பி முகவரி நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஐ.பி முகவரி ஆகியவற்றை காட்டும், இதன் மூலம் நாம் எளிதாக வேறு யாரவது பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ளலாம் .

நம் இடத்தில் இருந்தே sign out செய்யவும் இதில் வழி இருக்கிறது.

வேறு யாராவது பயன்படுத்தி முக்கிய தகவல் திருடப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வசதியாக இருக்கும்.

Courtesy: http://saidapet2009.blogspot.com

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்

நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.



பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள்





offline - enable கொடுத்து save செய்யவும்.




பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.




ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.

உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும்.



இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.