Thursday, July 9, 2009



" உலகம் உன்னை இறந்தவன் என்கிறது.. உறவுகளோ இறைவனாய் நம்புகிறது... உண்மை தாமதமாகவே வெளிப்பட்டாலும், சாதகமாய் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையில் நாட்கள் செல்கிறது!!"

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்

உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!