Thursday, July 31, 2008

இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். "வரும் பொதுத் தேர்தலில், ஜெயிலில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் முதல் அனைத்துக் கைதிகளும் ஓட்டுப் போடுவார்கள். அதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு போடுவார்கள். கோர்ட்டும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கும்... பாருங்கள்!' என நண்பர் என்னிடம் கூறவும் அதிர்ந்து போன நான், "அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க சாத்தியமே இல்லைங்க!' என்று பதில் கூற, நண்பர் தொடர்ந்தார்."என்ன நண்பரே... உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, பண்பாடுகளும் கலாசாரமும், இறையாண்மையும் நிறைந்த ஒரு இந்தியநாட்டின் அரசாங்கத்தைக் காப்பாற்ற படுபயங்கர கொலைகள் செய்து, அவை நிரூபிக்கப்பட்டு,

நமது கோர்ட்டால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை, நம்பிக்கை ஓட்டுப் போடுவதற்கு மத்திய அரசே ஏற்பாடு செய்கிறது.சுப்ரீம் கோர்ட்டும் அவர்களை அனுமதிக்கிறபோது, வரும் தேர்தலில் ஓட்டுப் போட நாட்டிலுள்ள மற்ற கைதிகளையும் அனுமதிக்கலாம் அல்லவா?மேலும், பப்பு யாதவ் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டுப்போட அனுமதி கேட்ட போது, "இது தப்பு யாதவ்' என நமது சுப்ரீம் கோர்ட்டே சொல்லவில்லையே...!' என நண்பர் மனவேதனையுடன் கூறியபோது என்னால் பதில் கூற முடியவில்லை.ஒருபக்கம், ஆங்காங்கே குண்டுகளை வைத்து அப்பாவி மக்களின் உயிரைக் கொல்கின்றனர் பயங்கரவாதிகள்.

இன்னொரு பக்கம் கொலைக் குற்றவாளிகள் ஓட்டுப்போட்டு, ஜெயித்துநாட்டை ஆள்பவர்களாகி, மக்களின் மனதைக் கொல்கின்றனர்.எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்தியாவில் பிறக்க வேண்டும், அதிலும் இந்தியனாய் வாழவேண்டும் என நமது தேசத்தின் மீது நேசம் கொண்ட ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். ஆனால்...நடப்பவற்றை நினைத்துப் பார்த்தால், நின்றுவிடவா? என இதயம் கேட்கிறது. கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. எம் இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?யார் இதற்கு பதில் சொல்வார்கள்? ஒன்றும் சொல்லத் தெரியவில்லை எமக்கு!

பொருளாதாரத் தீர்வு !!!

பணவீக்கம் 11 விழுக்காட்டையும் தாண்டி எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இயற்கையின் மர்மப் புதிர்களை அவிழ்த்து சுனாமி எனும் பேரழிவுக்குக் கூட அறிவியல் விளக்கமளித்து விட்டது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மனிதப் பேரழிவுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. யானையைத் தடவிய குருடர்களைப் போல பணவீக்கத்துக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கங்கள், பணவீக்கத்தைக் காட்டிலும் பெரிதாக வீங்கிக் கொண்டே செல்கின்றன.

எந்தக் கோணத்தில் செய்யப்படும் வியாக்கியானமாக இருந்தாலும், அவையனைத்தும் உலக நிதிமூலதனக் கும்பலை, பன்னாட்டு நிறுவனங்களை, அமெரிக்க வல்லரசை, ஒரு வார்த்தையில் கூறினால் உலக முதலாளித்துவத்தையே குற்றவாளி என்று அடையாளம் காட்டுகின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக உலகெங்கிலும் ஒரே நேரத்தில் எழும்பியிருக்கும் இந்த செயற்கை சுனாமி, இயற்கை சுனாமியைப் போலன்றி, ஏழைகளின் மீது மட்டுமே பேரழிவை ஏவி வருகின்றது.

"உழைப்புச் சக்தி உள்ளிட்ட எல்லாப் பண்டங்களின் பணமதிப்பும் (விலையும்) உயருதல்'இதுதான் பணவீக்கம் என்ற சொல்லுக்கு முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் அளிக்கும் விளக்கம். ஆனால் நாம் காணும் உண்மை நிலைமை என்ன? அரிசி முதல் பெட்ரோல் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் ஊதியம் உயரவில்லை. எனவே இந்த விலைவாசி உயர்வைச் சமாளிப்பதற்காக உணவு உள்ளிட்ட தமது நுகர்வுகளை மக்கள் குறைத்துக் கொள்கிறார்கள்; அல்லது வருமானத்தைக் கூட்டுவதற்காக உழைப்பு நேரத்தை அதிகரித்திருக்கிறார்கள். "உழைப்பை அதிகரிப்பது அல்லது நுகர்வைக் குறைப்பது' இரண்டின் பொருளும் ஒன்றுதான். பணவீக்கத்தின் காரணமாக வீழ்ச்சி அடைந்திருப்பது பணத்தின் மதிப்பு அல்ல; உழைப்புச் சக்தியின் மதிப்பு. இது உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்களின் மீதும் உலக முதலாளித்துவம் ஏவியிருக்கும் மறைமுக ஊதிய வெட்டு!

இந்தப் "பண வீக்கத்தின்' மூலம் பிழிந்தெடுக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்புதான், கொள்ளை இலாபமாகக் குவிந்து கொண்டிருக்கின்றது. விலை உயர்வைச் சமாளிக்க நீங்கள் குறைத்துக் கொண்ட ஒரு வேளைச் சோறு, நிறுத்தப்பட்ட உங்களது மகனின் படிப்பு, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பணம் .. இவைதான் தங்கக் காசுகளாக மாறி அம்பானி, டாடாக்களின் பணப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. எனவேதான் நிதி மூலதனக் கொள்ளையர்கள், பன்னாட்டு முதலாளிகளின் இலாபம் வீங்கிக்கொண்டே போகிறது.

பணவீக்கம்விலைவாசி உயர்வு ஆகியவை குறித்த பொருளாதாரச் சொற்சிலம்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இப்படியொரு எளிமையான கேள்வியை எழுப்பிப் பாருங்கள். கச்சாப் பொருட்களின் விலையும் உற்பத்திச் செலவும் அதிகரிக்காத போது, இரும்பின் விலையும் சிமெண்டின் விலையும் பிற பொருட்களின் விலையும் ஏன் உயர வேண்டும்? அவற்றின் விலைக்கு அரசாங்கம் ஏன் ஒரு உச்சவரம்பை நிர்ணயிக்கக் கூடாது? ""முடியாது. சந்தையின் சுதந்திரத்தில் அவ்வாறு தலையிட முடியாது'' என்று இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார் சிதம்பரம். ஒரு குடிமகனின் உயிர் வாழும் உரிமையைக் காட்டிலும், ஒரு மனிதனின் உணவுக்கான உரிமையைக் காட்டிலும், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கான முதலாளிகளின் உரிமைதான் மேன்மையானதாம்! ""எனினும் இது ஒரு பொருளாதாரக் கொள்கை மட்டுமே. இதனை அரசியலாக்காதீர்கள்'' என்கிறார் அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங். இதனைப் பொருளாதாரக் கொள்கையாக மட்டுமே நாம் ஒப்புக் கொள்வோமானால் அந்தக் கொள்கை வழங்கும் தீர்வான பட்டினிச்சாவையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.

மக்கள் தங்களை வருத்திக் கொள்வதன் மூலம், இந்தப் பாரதூரமான நிலைமையை எத்தனை நாளைக்குச் சமாளிக்க முடியும் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் ""மலிவாக உணவுப் பொருட்கள் கிடைத்து வந்த காலம் மலையேறி விட்டதாக''ப் பொருளாதார வல்லுநர்கள் பயமுறுத்துகிறார்கள். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அடுத்த ஓரிரு மாதங்களில் இருநூறு அமெரிக்க டாலரைத் தொட்டுவிடும் என அச்சமூட்டும் விதத்தில் செய்திகள் வெளிவருகின்றன.

உழைக்கும் மக்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் திணறுவதை விடப் பரிதாபகரமானது, விலைவாசி உயர்வைச் சகித்துக் கொண்டு வாழும் மனோபாவம்தான். ஏனென்றால், இந்தச் சகிப்புத் தன்மை, அவர்களைச் சுய அழிவை நோக்கி அல்லவா தள்ளிச் செல்கிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை, ஏறத்தாழ 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தீராத நோய்க்கு ஆட்பட்டுள்ள பல நோயாளிகள் மருந்து உட்கொள்வதையே நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வீ.எஸ். நடராசன். விலைவாசி உயர்வைச் சமாளிக்க இன்று தங்களின் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் மக்கள், நாளை பட்டினி கிடந்து நிலைமையைச் சமாளிப்பார்களா?

உழைக்கும் மக்களிடம் காணப்படும் இந்தச் சகிப்புத் தன்மைதான், பெட்ரோல் விலை உயர்வு என்ற இடியை மக்களின் தலையில் இறக்கும் தைரியத்தை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பெட்ரோல் விலையை முன்னரே உயர்த்தியிருக்க வேண்டும்'', ""விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விடும் தைரியத்தை ப.சிதம்பரத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பொருளாதார வளர்ச்சி இருந்தால் விலைவாசி உயரத்தான் செய்யும்'' என அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங் திமிராகப் பேசுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது.

இந்தப் பொருளாதார வளர்ச்சி உழைக்கும் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது. அதேசமயம், கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கும் அம்பானிக்கு, 200506இல் கிடைத்த 5,195 கோடி ரூபாய் இலாபத்தை 200607இல் ரூ. 10,372 கோடியாக வாரி வழங்கியிருக்கிறது. விலைவாசி உயர்வினால் நடுத்தர வர்க்கம் கூட வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடும் பொழுது, முகேஷ் அம்பானியோ 4,000 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர அரண்மனையைக் கட்டி வருகிறார்.

இப்படிப்பட்ட மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு கொண்ட பொருளாதார வளர்ச்சி அருவெறுக்கத்தக்கது. இதனை எதிர்த்துப் போராடினால், இருக்கின்ற வாழ்க்கையும் அழிந்து போய் விடுமோ என்ற அச்சம் உழைக்கும் மக்களை ஆட்டிப் படைக்கலாம். ஆனால், போராடாமல் சகித்துக் கொண்டு வாழ்ந்தால், இன்று இருப்பதைவிட மோசமான வாழ்க்கையை அல்லவா நாளை நாம் வாழ வேண்டியிருக்கும்?

உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற தீர்வை, பட்டினிச் சாவையும் வறுமையையும் ஒழிக்கின்ற வகையிலான பொருளாதாரத் தீர்வை நாம் தேடுவோமாயின், "நாம் உயிர் வாழ வேண்டுமானால், உலக முதலாளித்துவம் உயிர்வாழக் கூடாது' என்ற தீர்வே நமக்கு விடையாகக் கிடைக்கிறது. இதனைப் "பொருளாதாரத் தீர்வு' என்று ஆளும் வர்க்கம் ஒப்புக் கொள்வதில்லை. இதைத்தான் "அரசியல்' என்கிறார் அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங்

Thursday, July 17, 2008

தமிழா ! தமிழா !

ஒரு இனத்தை அழிப்பதற்கு ஒன்று படை எடுத்து சென்று அழிக்கவேண்டும் அது முடியாவிட்டால் கூட இருந்தே குழி பறிக்கவேண்டும் இதில் ஆரிய இந்தியா தமிழர்களை அழிக்க தேர்ந்தேடுத்து இருப்பது இரண்டாவது வழிமுறையாகும் இதை சற்று விரிவாக பார்ப்போம்.ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அவர்களது பூர்வ நிலம் மற்றும் பொருளாதார வளம் உயிர் நாடியான நீர் அதை ஒட்டிய விவசாயம், பண்பாடுகாளன வீரம்,கலாசாரம் ஆகியவற்றை பூண்டோடு அழிப்பதாகும். இதில் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.அன்று காவிரிதாயை தடுத்து சிறு சிறு மணல் குன்றுகளை ஏற்படுத்தி தடுத்த கன்னட மன்னர்களை சோழ மன்னர்கள் புறமுதுகு இட்டு ஓடசொய்து மணல் குன்றுகளை அகற்றி மீண்டும் காவிரிதாயை தமிழ் நாட்டிற்கு வரசெய்தான் அன்று மணல் குன்று இன்று அணை.இப்போது செய்யமுடியவில்லை ஏன்?இன்று விவசாயம் பொய்த்து போய் கட்டட வேலை செய்யவும் கக்குஸ் கழுவவும் வெளி நாட்டுக்கும் வெளி மா நிலங்களுக்கும் செல்கிறார்கள் ஆனால் நமது சொந்த மானிலத்தை பார்த்தால் மார்வாடிகளும் ,குசராத்திகளும் ஏனைய இனத்தவரும் சொகுசாக வாழ்கிறார்கள்.அதிலும் இந்த மலையாளிகளின் கொட்டம் சத்தமின்றி உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. டீக்கடையில் ஆரம்பித்து இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லை மீறி விட்டது. ஊர் நாட்டிலிருந்து இங்கே வந்து ஒருத்தன் தொழில் செய்தால் பரவாயில்லை, மாமன், மச்சான், அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா என எல்லோரையும் இங்கே இறக்குமதி செய்து விடுகின்றனர் இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் எனில் ஏன் ஊரை விட்டு நாடோடிகளாய் அலைகின்றனர். கேரளாவில் ஏன் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை? காரணம் இவர்களின் குள்ள நரித்தனமும் கம்யூனிசப் போக்கும் தான். அங்கே பருப்பு வேகாமல், இங்கே வந்து டேரா போட்டுக் கொண்டிருக்கின்றனர்.சரி இந்த ஆரியர்கள் நம்முடைய வீரத்தையாவது மதித்தார்களா,இரண்டாம் உலக போரின் போது இங்கு வெள்ளையன் கேட்டான் உங்களுடைய வீரப்பரம்பரையினரின் ஆட்களை தாருங்கள் என்று அப்போதும் இந்த ஆரியர்கள் தமிழர்களை தள்ளிவிட்டு எனைய சிங்கு,வங்காளி,மாரத்தி போன்ற இனங்களையே சேர்த்தார்கள், ஆனால் வெள்ளயனுக்கும் தெரியும் வரலாற்றுக்கும் தெரியும் யார் முதலில் வீரத்துடன் போராடினார்கள் என்று .

சரி ஒருசாரரான மீனவர்களையாவது நிம்மதியாக விட்டார்களா?இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்? இந்தியாவின் கடலோரக் காவல்படை சுழன்று சுழன்று சுற்றி வந்தபோதும் தமிழக மீனவர்களைச் சிங்களர் சுட்டுக் கொல்வதும் கடத்திச் செல்வதும் தடுக்கப்படவில்லையே ஏன்? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் மீன்பிடித்தால் அவர்களைத் தளைப்படுத்தலாம். அதைவிடுத்து அவர்களை சுட்டுக் கொல்வது என்ன ஞாயம்? தமிழகத்திற்குரிய கச்சத்தீவை இந்திராகாந்தி சிங்கள அரசுக்குக் கொடுத்ததால்தானே, எல்லை தாண்டித் தமிழக மீனவர்கள் வந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டே வருகிறது. சாகின்றவர்கள் தமிழர்கள்; எனவே, சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது.சரி இதை எல்லாம் பார்த்து இங்குள்ள கட்சிகள் என்ன செய்கிறது? தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம். இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார், 2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர், திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள். இந்திய அடிவருடியாகவும்,அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..?

தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர்.

தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானே தவிர பெருமுதலாளிகள் தலைமையிலான இந்தியத் தேசியத்தை அல்ல!

- தமிழ்

Wednesday, July 16, 2008

நம் பாரம்பரியத்தை நாமே இழக்கலாமா?


ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய கண்டங்களின் உட் பகுதிகளில் சுற்றிய அனுபவம் சொல்லும் பாடம், இந்திய உணவு குறிப்பாகத் தென்னிந்திய உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது. சில நகரங்களில் மட்டும் தான் நம்மூர் ஆட்கள் தனிக் கடைகள் வைத்து நம்மூர் உணவுகளைத் "தங்க' விலைக்கு விற்றுக் கொண்டிருப்பர். சிறு நகரங்களிலும், ஊர்களிலும் அத்தகு வசதி எதுவுமில்லை. பட்டினி கிடப்பது தவிர வேறு வழியில்லை. நட்சத்திர ஓட்டல்களில் தங்கினாலும் மாடும், மனுஷனும் கிடைப்பரே தவிர, நாம் நாடும் உணவைப் பெற்றுப் பசியாறிட முடியாது.

நம் ஊர் நட்சத்திர விடுதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்விடுதிகளில் ஐரோப்பிய, அமெரிக்க உணவுகள் அதே மாதிரியில், அதே சுவையில், அதே வடிவ சீனத் தட்டுகளில் கிடைக்கும். நம்மூர் உணவு தான், நம் ஊர்ச் சுவையுடன் கிடைக்காது. எத்துணை வேறுபாடு? ஐரோப்பியரோ, அமெரிக்கரோ நம் நாட்டிற்கு வந்தால் அவருக்கு ஏற்ற உணவைப் பெரும்பாலும் பெற்று உண்டு விட முடியும். ஐநூறு ஆண்டுகள் ஐரோப்பியர் கள் நம்மை ஆண்ட போதும், நம்முடைய உணவு வகைகள் எதனையும் கற்றுக் கொள்ளவோ, நம் நாட்டிற்கு எடுத்துச் செல்லவோ நம் உணவுகளுக்குப் பழக்கமாகவோ, அடிமையாகவோ அவர்கள் ஆனதில்லை. மறுதலையாக நம் ஊர் விடுதிகளில் வழங்கப் பெறும் உணவுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய, அமெரிக்கச் சுவை நோக்கிச் சென்றுவிட்டன.

ஐரோப்பியருடைய பண்பாடு, உடல் சார்ந்தது; லவுகீகத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் பண்பாடு மனம் சார்ந்தது; ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் மூளைக்கே முதலிடம் கொடுப்பர்; நாம் இதயத்திற்கு முதலிடம் கொடுப்பர். அவர்களுக்கு அறிவியல் முக்கியம்; நமக்கோ கலையில் முக்கியம்.

இந்நிலையில், நம் ஊரிலேயே நம் உணவு முறை, உடை முறை, குடும்ப உறவு முறை, நல்ல பழக்க வழக்கப் பண்பாடுகளை நாம் ஏன் இழக்க வேண்டும்? பெற்றவளே குழந்தையைக் கைவிட்டு விட்டால், அக்குழந் தையை எடுத்து வளர்ப்பார் யார்? ஐரோ-அமெரிக்க முறைகளுக்கு மாறினதால் வந்துள்ள வயிறு, குடல் சார் நோய்களையும், பாலுறவு நோய்களையும் வராமல் தடுத்துக் காத்துக் கொள்வது எங்ஙனம் சாத்தியமாகும்?

இஸ்ரேல் நாட்டு யூதர்களைப் பற்றிய வரலாறு உலகம் அறிந்த ஒன்று. கி.மு.,வில் தம் பிறந்தகத்தை விட்டு ரோமானியர்களால் விரட்டப்பட்ட அவர்கள் உலக நாடெங்கும் அகதிகளாகவும், அனாதைகளாகவும் திரிந்தனர் என்றாலும், சென்ற இடங்களில் சிக்கனமாக இருந்தனர். கல்வி கற்பதில் முனைப்போடு இருந்தனர்.

அனைத்திலும் மேலாகத் தம் சமய ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். 1948ல் இஸ்ரேல் தனி நாடாக மத்திய ஆசியப் பகுதியில் உருவான போது, அவர்களுடைய தாய்மொழி ஹீப்ரு பேசப்படும் மொழியாக இல்லை. அவர்கள் கோவில்களில் பூஜை மொழியாக மட்டுமே இருந்தது. அத்தகு நிலையிலிருந்த மொழியை உயிர்ப்பித்து, புதிதாக எழுத்தமைத்து இஸ்ரேலிய ஆட்சி மொழி ஆக்கினர். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் யூதர்களைத் தாயகம் நோக்கி அழைத்தனர்.

அப்போது, கேரளப் பகுதியிலிருந்தும், வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்தும் யூதப் பரம்பரையினர் தம் தாயகம் செல்லத் துடித்தனர். உடனே, அவர்களை இஸ்ரேலிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் உண்மையாக யூதப் பரம்பரையில் வந்தவர்கள் தானா என்று பரிசோதித்துப் பார்த்தனர்.

பரிசோதனையில் முக்கியமானது, அவர்கள் தங்கள் பூர்வீக மதச் சடங்குகளைக் கொண்டுள்ளனரா என்பது தான் முதலாவதாக இருந்தது. அதன் அடிப்படையில் அம்மக்கள் இஸ்ரேலியக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தம் பாரம்பரிய வேர்களை இழக்காமல் எத்துணைச் சோதனைகள் நேர்ந்த போதும், அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் உலக மக்களிடையே யூதர்களுக்கு முதலாவது இடம் கொடுக்க வேண்டும்.

சமூக உளவியல் அறிஞர்கள், சீனர்களைத் தம் பாரம்பரியத் தைக் கப்பாற்றுவதில் குறிப் பிட்டுப் பேசுகின்றனர். சீனர்கள் அடிப்படையில் தாம் தாம் உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று நம்புகிறவர்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன தாம் உயர்ந்தவை என்று கருதுகிறவர்கள். தலைமைக்குக் கட்டுப் படுகிறவர்கள். உலகத்தின் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் தங்கள் அடையாளத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்பவர்கள். அவர்களுடைய பெயர், மூன்று கூறுகளை உடையதாக இருக்கும். குடும்பப் பெயர், இனப் பெயர், தன் பெயர் என அமைந்திருக்கும். சான்றாக மா சே துங். இம்மூன்று கூறுகளும் மேற்கண்ட வரிசை முறையை உடையவை.

இம்முறையை அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை. நிர்பந்தங்களின் காரணமாக எங்கேனும் மதம் மாற நேர்ந்தாலும், அவர்களுடைய சீனப் பெயரும் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தப் பிடிவாதம் தான், 15ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் சீனாவை அடிமைப்படுத்த முயன்ற போது, அரசர் உட்பட அனைவரையுமே எதிர்க்க வைத்தது.

இதில், அவர்கள் முழு அளவு வெற்றி பெறவில்லை என்றாலும், முழு வெற்றி பெற்றவர்கள் சீன (மங்கோலிய) இனத்தைச் சேர்ந்த ஜப்பானியர்கள், தாய்லாந்துகாரர்கள். ஐரோப்பியர்களுக்கு அடிமைகளே ஆகாத ஆசிய நாடுகள் இவை என்பது உலக வரலாறு. புதிய கடவுள் போதனை செய்ய வருகிறோம் என்று நெதர்லாந்தில் இருந்தும் பிரான்சிலிருந்தும் மத போதகர்கள் தம் நாட்டிற்கு வந்த போது, அவர்களை உள்ளே நுழையவே ஜப்பானிய அரசும், தாய்லாந்து அரசும் அனுமதி அளிக்க மறுத்து விட்டன.

யூதர்கள், சீனர்கள் மட்டுமின்றி, இன்று உலகெங்கும் தம் ஆதிக்கத்தைச் செலுத்தும் ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்கு மூலவரான கிரேக்கரும் ரோமானியரும் தம் வேர்களை இழக்காத வித்தகர்கள் என்று சொல்ல வேண்டும். மிகப் பழைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் உடையது கிரேக்கம். அதனது பாதிப்பால் மேலும் பரிணமித்தது ரோமானியம்(இத்தாலி).

இவ்விரண்டிலிருந்து தான் ஐரோப்பிய மேற்குலகக் கலாசாரம் பிறந்து வளர்ந்து, தழைத்து உலகம் முழுவதும் படர்ந்தது. ஐரோப்பிய நாடுகள், தமக்குள் முரணிக் கொள்ளுமே தவிர, ஆசிரியர், ஆப்ரிக்கர் முதலானோர்க்கு அடிமை ஆனதே இல்லை. (மங் கோலியத் தலைவன் செங்கிஸ் கான் ஆண்ட சில காலம் தவிர)

நிக்காலோ மானுச்சி (கி.பி.1653-1708) என்ற இத்தாலியரின் பயணக் குறிப்பு இதை மேலும் உறுதி செய்கிறது. கி.பி.1653ல் வெனிஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் வழி, மானுச்சி 14 வயது சிறுவனாக உலகைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் புறப்பட்டார். கடலிலும் தரையிலுமாக 1380 மைல் கடும் பயணம் செய்து, தன் நண்பர் ஒருவருடன் இந்தியா வந்தடைந்தார். அப்போது, இந்தியாவை அவுரங்கசீப் ஆண்டு கொண்டிருந்தார்(1658).

உடன் வந்த நண்பர் இறந்து விட, மொகலாயச் சட்டப்படி, நண்பரின் உடைமைகளை நேரில் கைப்பற்ற அரசாங்க அதிகாரி, மானுச்சி தங்கி இருந்த இடத் திற்கு படை பரிவாரங்களுடன் வந்தார். வந்தவர், மானுச்சியின் உடைமைகளையும் சேர்த்துக் கைப்பற்றினார். மானுச்சி தடுத்தார். அப்போது, மொகலாய அரசு அதிகாரி, "நீ எங்கள் அரசருடைய அடிமை' என்று சீறினார். அதை மறுதலித்த மானுச்சி, "ஐரோப்பியர்கள் என்றும் எப்பொழுதும் எவருக்கும் அடிமையாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டார்கள்,'' என்று கர்ஜித்தார். பின்னாளில், அவரே டில்லி அரச ஆலோசகராய் பதவியில் அமர்ந்தார்.

ஆக கூர்ந்து பார்த்தால், உலகில் பல நூறு ஆண்டுகளாகத் தம் தலைமையை உலக வரைபடத்தில் இருந்து இழக்காமல் நிரந்தரப்படுத்திக் கொண்டிருக் கும் யூதர், சீனர், கிரேக்கர், ரோமானியர் முதலான ஐரோப் பிய இன மக்களிடம் இருந்த மிக முதன்மையான பண்பு, தம் பாரம் பரியத்தை இழக்காமை தான்.

எனவே தான், உலகம் முழுவதும் பரவியிருக்கும் பண்பாட்டுத் தழுவுதலை மூன்று வகையாக்கி அறிஞர்கள் சொல்கின்றனர்.

முதல் வகை : ஐரோப்பிய முறை: ஐரோப்பியர் தம் தாயகத்திலும் செல்லும் இடங்களிலும் தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை இழக்காததுடன், சென்ற இடங்களில் வாழும் உள்நாட்டு மக்களிடமும் பரப்பி விடுவர். உள்நாட்டு மக்கள் தம் மொழி, பண்பாடு, நாகரிகத்தை விட ஐரோப்பியருடையது தான் உயர்ந்தது என்று நம்பவும் வைத்து விடுவர்.

இரண்டாம் வகை : யூத முறை: தாய் நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சிதறிய யூதர்கள், தமக்குரிய பண்பாடு முதலானவற்றை இழக்கமாட்டர். அன்றியும் தம்முடையவற்றை மற்றவர்கள் மேல் திணிக்கவும் மாட்டர்.

மூன்றாவது வகை : நீக்ரோ முறை: இம்மக்கள் தம்மையும், தம் தாயகத்தையும் அடிமைப்படுத்திய அயல்நாடுகளின் இறக்குமதிப் பண்பாடு முதலானவற்றை ஏற்றுக் கொள்வதுடன், தம்முடைய பாரம்பரியப் பண்பாட்டையும் தம் தாயகத்திலேயே இழந்து விடுவர்; இழிவாகவும் கருதுவர். இம்மூன்று முறைகளில் நாம் எந்த முறையைச் சேர்ந்தவர்கள் என்பதை எண்ணிப் பார்ப்போமா?

நன்றி்-க.ப.அறவாணன்

Tuesday, July 1, 2008

கச்சா எண்ணெய் விவகாரத்தின் பின்னணி என்ன?


கச்சா எண்ணெய் விலைகள் கூடுவதற்கு உலகளவில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஐந்து காரணங்கள் மிகவும் முக்கியமானவை:உலகளவில் எண்ணெய் உபயோகம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் உபயோகம் அதிகமாக இருக்கிறது.விலை சரியாமல் இருப்பதற்காக சில சமயம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன. இது செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை மறுபடி கூட்ட உதவுகிறது.சில சமயம் சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டுப் பிரச்னைகள் அண்டை நாடுகளுடன் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவைகளால் எண்ணெய் உற்பத்தி குறைகிறது அல்லது நிறுத்தப்படுகிறது.


எண்ணெய் விலை வருங்காலங்களில் உயரும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு உள்ளவர்கள் மார்ஜின் பணத்தை செலுத்தி டிரேட் செய்யலாம். இதில் உலகளவில் பலர் ஈடுபட்டுள்ளதால், இதுவும் தற்போது கச்சா எண்ணெய் விலை கூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.டாலர் மதிப்பு, கூடிவரும் பணவீக்கம், குறைந்து வரும் பங்குச் சந்தை ஆகியவைகளால், முதலீட்டாளர்கள் தங்கம், எண் ணெய் முதலீடுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், எண்ணெய் வழுக்கிக் கொண்டு கீழே இறங்காமல் மேலே ஏறிக்கொண்டு இருக்கிறது.அமெரிக்காவில் எண்ணெய் உபயோகம் குறைந்துள்ளது என்று வந்த புள்ளி விவரத்தை அடுத்து, சென்ற வாரம் ஒரு பேரல் 132 டாலர் அளவிற்கு குறைந்தது.


ஆனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150-170 டாலரை எட்டும் என்று விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து விலை மறுபடி கூட ஆரம்பித்தது. தற்போது 140யை தாண்டி நிற்கிறது.கச்சா எண்ணெய் என்றால் என்ன?கச்சா எண்ணெய் என்றால் ஹைட்ரோ கார்பன் கலந்த ஒரு திரவம்.


இனிப்பான கச்சா எண்ணெய் : கச்சா எண்ணெயில் எத்தனை வகைகள் உள்ளன? வெஸ்ட் டெக்சாஸ் இண்ட்ர்மீடியேட் கச்சா எண்ணெய் தான் உலகிலேயே சிறந்த எண்ணெய். மற்ற கச்சா எண்ணெய்களை விட 2 முதல் 4 டாலர் வரை அதிகமாக விற்கப்படுகிறது. இதில் குறைந்த அளவே சல்ப்பர் இருப்பதால் (0.24 சதவீதம்) இது இனிப்பான கச்சா எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உபயோகிக்கப்படும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் அதிக சல்ப்பர் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யபடுவதாகும்.


முக்கியமான பொருளா என்ன?: ஒரு பேரல் என்றால் என்ன?ஒரு பேரல் என்றால் 42 அமெரிக்க காலன். அதுவே லிட்டரில் பார்த்தால் 158.98 லிட்டர். ஒரு டன் கச்சா எண்ணெய் என்பது 7.33 பேரல்.எண்ணெய் மேல் ஏன் இவ்வளவு பிரியம் காட்டுகிறோம். அவ்வளவு முக்கியமான பொருளா என்ன?ஆமாம். உலகளவு எரிசக்தி தேவையில் 40 சதவீதத்தை கச்சா எண்ணெய் தான் சமாளிக்கிறது. உலகளவில் ஒரு நாளைக்கு 76 மில்லியன் பேரல் உபயோகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் தினசரி 20 மில்லியன் பேரல்களும், சீனாவில் தினசரி 5.6 மில்லியன் பேரல்களும், ஜப்பானில் தினசரி 5.4 மில்லியன் பேரல்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.


எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்றால் என்ன?


உலகின் 40 சதவீதம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான அல்ஜீரியா, இந்தோனேஷியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவூதி அரேபியா, யூ.ஏ.இ., ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு தான் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. இந்த நாடுகளிடம் தான் 75 சதவீத எண்ணெய் ரிசர்வ்கள் உள்ளன. உலகின் 55 சதவீத ஏற்றுமதியை இவர்கள் தான் செய்து வருகின்றனர்.இந்தியா ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய் உபயோகிக்கிறது?


இந்தியா முதல் 10 இடங்களில் ஒன்றாக வருகிறது. தினசரி 2.2 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது.இந்தியாவில் எண்ணெய் கிடைப்பதில்லையா?இந்தியாவின் ஒரு நாள் எண்ணெய் உற்பத்தி 0.8 மில்லியன் பேரல்கள் தான். 70 சதவீதம் நாம் இறக்குமதியையே நம்பி இருக்கிறோம். தற்போது ராஜஸ்தான், பாம்பே ஹை போன்ற இடங்களில் எண்ணெய் வளங்கள் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் வருங்காலங்களில் இவை நமது தேவையை சிறிது பூர்த்தி செய்யும் என நம்பலாம்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ன செய்கிறது?இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு மிகவும் குறைந்த அளவே செலவு ஆவதால், ரிலையன்ஸ் பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து எரிபொருளாக்கி ஏற்றுமதி செய்கிறது.


இந்தியாவில் மாற்று எரிபொருளே இல்லையா?பல மாற்று எரிபொருட்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லாததால் எண்ணெயையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. ஆதலால், உபயோகங்களை குறைத்து நாட்டையும், வீட்டையும் வளமாக்க பாடுபடவேண்டும்.