Thursday, April 23, 2009

கலைஞர் அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்...



கலைஞர் அவர்களுக்கு,

எனக்கு அரசியல் விளையாட்டு அந்த அளவுக்குஅதாவது உங்கள் அளவுக்கு தெரியாது எனக்கு.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் அரசியல் அறிந்த வயதில் எம்ஜியார் அவர்கள் கோலோச்சி கொண்டு இருந்தார். அதன் பிறகு நீங்கள்தான் இன்று வரை....

நீங்கள் சொல்வது போல் தமிழக அரசியல் எடுத்து யாராவது பேச ஆரம்பித்தால் அதில் உங்களை திட்டியோ அல்லது பாராட்டியோ பேசாமல் தமிழக அரசியல் பேச முடியாது. அது தமிழக வரலாற்றில் எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்ததில் இருந்து, வீரானம் வரை எகப்பட்ட சர்ச்சசைகள் உங்களிடம்.
நான் பழய விஷயத்தை கிளற விரும்பவில்லை. அது இப்போதைய தேவையும் அல்ல...

ஆட்சியை பொருத்தவரை நன்றாகவே இருக்கிறது எப்போதாவது சிறு சிறு தவறுகள் செய்யும் போது எல்லாம் உங்களுக்காக நாங்கள் பரிந்து பேசி இருக்கிறோம், எத்னையோ நண்பர்களின் நல்ல நட்பு உங்களால் பிரிந்து போய் இருக்கிறது.

விட்டு தள்ளுங்கள் எங்களுக்கு நீங்கள்தான் வேண்டும்.

நீங்களும் திருடர்தான் ஆனால் என்ன கொஞ்சம் நல்ல திருடர்அவ்வளவுதான்.
எல்லோரும் 75 பர்சன்ட் அடித்தால் நீங்கள் பத்திலிருந்து 20 பர்சென்ட் அடிப்பீர்கள். அது எல்லோரும் செய்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட...
கட்சி நடத்த வேண்டுமே?

ஒரு சாதராண தற்க்கொலை கேஸ் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் என்று நீங்கள் கணவிலும் நினைத்து பார்த்து இருக்கமாட்டிர்கள்.

அந்த முட்டாள், இலங்கை தமிழர்கள் வாழ்க என்று குரல் கொடுத்து தீக்கு தன்னை தின்ன கொடுத்தது இருந்தால் அது எப்படியும் சாதாரண தற்கொலை கேசாக மாறி இருக்கும்.

நீங்களும் நிம்மதியாக இருந்து இருப்பீர்கள். அடுத்து கயல் விழிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று யோசித்து இருப்பீர்கள்.

செத்த முண்டம் தன் அறிவு தாகத்தை ஒன்று திரட்டி ஒரே நேர் கோட்டில் யோசித்துஇறப்புக்கு பிறகு தன் உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறான் என்றால் யோசித்தவன் எப்படி முன்டமாவான்? அவன் எப்படி யோசிக்கதெரியாதவன் ஆவான்? தமிழகத்தில் உள்ள எல்லோரையும் பதினாறு பக்க கடிதத்தில் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டு அல்லவா உயிர் துறந்து இருக்கிறான் . அது நீங்களே என் நாங்களே எதிர்பாராதது.


அவன் சமுக கோபத்தை மிக சிறப்பாக பதிவு செய்து விட்டு சென்று இருக்கிறான். இன்றளவும் உங்கள் மேல் மையல் கொண்டவர்கள் முத்துக்குமரன் விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்கிறார்கள். அல்லது சப்பை கட்டு கட்டுகிறார்கள்

நான் அப்படி அல்ல,


இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ராஜினாமா அறிவித்தது நாங்கள் அல்ல நீங்கள் தான். அதிலேயே உங்கள் பெயர் ரிப்பேர் ஆகிப்போனது.
அடுத்ததாக பிரனாப் முகர்ஜி இப்போது அப்போது இலங்கைக்கு போகிறேன் என்று சொன்ன போது நீங்கள் தலையாட்டியது மட்டும் அல்ல...எங்களையும் ஆட்ட வைத்தீர்கள்.

நீங்கள் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள் மத்திய அரசு உடலுறவில் கிழிந்து போன நீரோத் போல் நம் சட்ட மன்ற தீர்மானத்தை தூக்கி போட்டது. பொறுத்துக்கொண்டோம்.

கடைசியாக பாதுக்காக்கப்பட்ட இடத்தில் குண்டு போடட்டார்கள். அப்போதாவது உங்கள் கண்டனத்தை தெரிவித்தீர்களா ? இல்லையே.

இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் இழப்புகளை சந்திப்பது திமுகதான். இதில் கொடுமை என்ன வென்றால் எப்போதும் எதிர் பேச்சு பேசிய, இந்து ராம் ,சோ,ஜெ,சுவாமி எல்லோரும் நல்லவர்களாகி போய்விட்டார்கள். அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லை, கேட்டாலும் பதில் கிடைக்காது என்பது தெரியும். அதனால்தான் நாங்கள் உங்களை கேட்கிறோம்.

தினமும் பிச்சை போடும் பெண்மனிக்குஅன்று வீட்டி்ல் சாப்பாடு இல்லை அதனால் அவள் பிச்சைக்காரனை நாளைக்கு வா என்கிறாள், ஆனால்எப்போதும் பிச்சை போடாத எதிர்வீட்டுக்காரி பிச்சை போட அந்த பிச்சைக்காரன் இப்படித்தான் சொன்னான்.

டெய்லி பிச்சை போடற தேவிடியா இன்னைக்கு போடலை..
என்னைக்கும் பிச்சை போடாத மகராசி இன்னைக்கு போட்டு இருக்கா என்றானாம் அதுதான் உங்கள் இப்போதைய நிலையும்.

அன்று ஜெ சொல்வது போல்தான் இப்போது நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவுவோம் ஆனால் புலிகளுக்கு உதவமாட்டோம் என்று சொல்கிறீர்கள்...

சோனியாவுக்காக சொல்பவர் என்றால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து தீக்குளித்த முத்துக்குமரன் குடும்பத்துக்கு ஏன் 2 லட்சம் நிவாரன தொகை அளித்தீர்கள், சவ ஊர்வலத்தில்புலிக்கொடி போர்த்தி புலித்தலைவர் படத்தை எடுத்துபோனார்களே எம் மக்கள் அவர்களை கைது செய்ய வேண்டியதுதானே?

முடியாது ஏனென்றால் அது ஒரு எழுழ்ச்சி அதை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அடக்கி வாசித்தீர்கள். ஒரு சாதாரன பத்திரிக்கையாளன் தற்கொலை செய்து இறந்ததுக்கு பொதுமக்கள் ஏன் மெழுகு வர்த்தி ஏந்தி தன் துக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

அதை விட கொடுமை மகர ஜோதி, சொர்ககவாசல் திறப்பு என்று நேரலை செய்யும் உங்கள் டிவியும் உங்கள் பேரன் டிவியும் நேரிடி ஒளிபரப்பு செய்யவில்லை.ஒபாபமா பதவியேற்பை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்ப செய்தீர்கள் முத்து்க்குமாரன் தமிழன் என்பதாலா அல்லது அவன் உண்மை பேசிவிட்டதாலா?

ஏன் ஏன்றால் அவன் எழுப்பிய கேள்வி நியாயமானது...அதில் கிஞ்சித்தும் சுயநலம் இல்லை.

சாதரனமாக தமிழன் ஒகேனெக்கல் கூட்டு குடி நீர் என்றாலே கர்நாடகத்தில் தமிழக பேருந்து மீது கல் வீச்சு நடக்கிறது. நாம் அதை வேடிக்கை பார்த்து 40 நமதே என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

இப்போதும் உங்களை மட்டும்தான் நாங்கள் நம்பி இருந்தோம் பொதுக்குழுவில் ஏதாவது முடிவு எடுப்பீர்கள் என்று .....
எதிர்பார்த்தது போல் நல்ல முடிவு எடுத்தீர்கள் நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பதை இன்னும் ஒரு வாரத்துக்கு விரிவு படுத்தி இருக்கிறீர்கள் அவ்வளவே.

இப்போது கூட அனுதினமும் உங்கள் தொலைக்காட்சியில் வருவது போல் கடலில் கட்டு மரம் என்று இனியும் கதை விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழின தலைவர் என்ற பட்டம் கூட சிலகாலத்துக்கு வேண்டாம் அதை கொஞ்சகாலத்துக்கு தூக்கி தூர போடுங்கள்.
இந்த பதிவு கூட உங்கள் மேல் இன்றளவு நான் வைத்து இருக்கும் மரியாதைக்குதான்.

இன்னும் காங்கிரஸ்காரர்கள் பின்னால் நீங்கள் நின்றீர்கள் என்றால் 40ல் ஒன்று கூட தேறாது. இதுதான் அப்பட்டமான உண்மை. மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.. அதனால்தான் சரத்குமாருக்கு 800 சொச்ச ஓட்டுக்கள்.
மக்களுக்கு தகவல்கள் அசுர வேகத்தில் கிடைத்து விடுகின்றன...

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மட்டும் மிஞ்சும் ஏனென்றால் நீங்கள் தமிழர்களுக்கு செய்த வாழ்நாள் சாதனைக்காக...

படித்தவர்கள் மொழிப்புலமை பேச்சுத்திறமை எல்லாம் கற்றுக்கொண்டது உங்களிடம்தான். பொதுவாக படித்தவர்கள் பிரமனல்லாதவர்கள் அதிகம் இருக்கும் கட்சி திமுகதான் இப்போது
உங்களையே படித்தவர்கள் கேள்வி கேட்க ஆரப்பித்துவிட்டார்கள் என்றால் யோசியுங்கள்...

நீங்கள் மாறன் குடும்பத்தாருடன் இணைந்த நிகழ்வு புகைபடத்தை பார்த்து ரசித்தால் போதாது, புலம் பெயர்ந்த கோடிக்கணக்கான நம் இன இலங்கை தமிழ் மக்கள் தத்தம் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்த புகைபடத்தை உவகையுடன் பார்க்க வேண்டாமா?


நான் கூட உங்களை கேள்வி கேட்ட முதல் பதிவும்இதுதான், முதல் கடிதமும் இதுதான். கேள்வி கேட்க காரணமாக இருந்த இன்லெக்சுவல் முத்துக்குமரனுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Thursday, March 19, 2009

சிறு துளி.....- உலகத் தண்ணீர் தினம்




மண் மரம் மழை மனிதன் வலைப்பூவில் இருந்து இதோ ஒரு இடுகை.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நீர் சேமிப்பைப் பற்றியது.

ஒரு முறை எங்கள் தொழிற்சாலை தரக்கட்டுபாடு சோதனைச் சாலையிலிருந்து ரிப்போர்ட்டுகள் வெளியிடுவதில் தேக்கம் கண்டது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றாக்குறை. நீர் சுத்திகரிக்கும் உபகரணம் (Distillation unit) பழுதாகி பல சோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை. வெளியிலிருந்து வாங்குவதற்கு முயற்சி செய்தும் பல காரணங்களால் வந்து சேரவில்லை. இதனால் கைவசம் சரக்கு இருந்தும் அனுப்ப முடியாத நிலைமை. பெட்ரோல் பங்கிலிருந்து பாட்டரி நீரையாவது வாங்கி செய்யலாம் அவற்றின் தரம் சரியில்லை என்று பதில் வந்தது.

இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தொழிற்சாலையை சுற்றி வரும்போது குளிர்பதன அறைக்கான எந்திரத்திலிருந்து நீர் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் குழாய் வழியாக ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இதை ’காண்டென்சேட்’ என்று சொல்வார்கள். இது காற்றிலிருக்கும் அதிகமான ஈரப்பதம் கம்ப்ரெஸரின் உயர் அழுத்தத்தில் கனிந்து திவலைகளாகக் மாறி வெளியேறுவது.

இப்படி சதா நீர் வெளியேறிக் கொண்டிருப்பது வழக்கமான காட்சிதான் என்றாலும், அன்று மின்னலென ஒரு எண்ணம். நேரடியாக காற்றிலிருந்து கனிந்து வருவதால் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தானே! அதில் எவ்வித உப்புகளும் கரைந்திருக்க முடியாதல்லவா !

உடனடியாக ஒரு நல்ல சுத்தமான குழாயை செருகி அந்த நீரை சுத்தமான கண்ணாடி குடுவையில் பிடிக்கச் சொல்லி சோதனைச் செய்யச் சொன்னேன். மூன்று முக்கிய பரிசோதனைகளிலும் வெற்றி.

1) pH =7.63; 2) conductivity= 0.0 ; 3) Total Dissolved Solids= 0.0 ppm

அன்றிலிருந்து நீரை தனிப்பட்ட முறையில் சுத்திகரிக்க மின்சார சக்தியை பயன்படுத்துவது நின்றுவிட்டது. ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கும் குளிர்பதன இயந்திரம் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு உப பொருளாக தந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு 12 லிருந்து 15 லிட்டர் வரை சுத்தமான பரிசோதனைகளுக்கேற்ற நீர் கிடைக்கிறது. ஆனால் தேவையோ 10 லிட்டருக்கும் குறைவு.

10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கென 3KW மின்சார சக்தியை பயன்படுத்தினால் இரண்டரை மணிநேரங்கள் தேவைப்படும். அதற்கான மின்சக்தி ஏழரை யூனிட்டுகள், ஒரு மாதத்தில் சுமார் 200 யூனிட்கள் சேமிக்கப் படுகின்றது.

தொழிற்சாலையின் முழு மின்சக்தித் தேவையில் இந்த சேமிப்பு சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை. ஆயினும் இதை யாவரும் கடைபிடிக்க முன்வந்தால் கணிசமான நீர் சேமிப்பும் மின்சார சேமிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குறிப்பிடுகிறேன்.

உதாரணத்திற்கு 1.5 ton அறை குளிரூட்டும் எந்திரம் எட்டு மணிநேரம் வேலை செய்தால் 2.5 லிருந்து 3.0 லிட்டர் தண்ணீர் வெளியேற்றும். பெரிய திரை அரங்குகள், ’மால்’களில் நிறுவப்பட்டிருக்கும் ராட்சஸ குளிரூட்டும் எந்திரங்களால் ஒரு நகரத்திற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் வாகனங்களுக்கான பாட்டரி தர சுத்திகரிக்கப்பட்ட நீரை சுலபமாக சேமிக்கலாம்.

இப்படி நம் முன் இருக்கும் பலப்பல வழிகளை முனைப்புடன் ஒருங்கு படுத்தினால் நீர் மட்டுமல்ல மின்சக்தியையும் சேமிப்பவர்களாவோம்.

Monday, February 2, 2009

ஒரு சாமானியன் சகாப்தம் ஆனான் !


சென்னை :
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு 29.01.2009 வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.

முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.

அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.

தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?

கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).

பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.

உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.

என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.

தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.


அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.

ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.

சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.

ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?

தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.

ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.

ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.

அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.

Tuesday, January 13, 2009

பொங்கலோ பொங்கல்!

அழுகின்ற பிள்ளைக்கு
கொடுக்க உணவில்லை..
குளிரைத் தாங்கிட
போதிய உடுப்பில்லை..

விழுகின்ற குண்டுகளின்
வேகத்தை பொறுத்தே,
அடுத்த நிமிடங்கள்
உயிர்வாழ்கிற நிலை..

எங்கெல்லாம் குண்டுகள்
விழுகின்றனவோ
அங்கெல்லாம் அழுதபடி
தமிழ்த் தாய்மார்கள்...

இங்கெல்லாம் நடக்கிற
இன்னல்கள் கண்டும்
இனிக்குமா நமக்கு
புத்தாண்டும் பொங்கலும்?

காந்தியம் பேசிவிட்டு
களவாணித் தனமாக
"இந்தி"யன் அளித்த
ஆயுதங்கள் கொண்டு,

சிங்கள வெறியன்
தொடுக்கிறப் போரில்
"இந்தி"யர் என்பதால்
நமக்கும் பங்குண்டு..!

கொல்லாதே என்று
கூக்குரல் எழுப்பினால்
தேசத் துரோகமாம்
இந்தியம் சொல்கிறது...

கொலைகார "இந்தி"யனாய்
வாழ்ந்து தொலைப்பதைவிட
தமிழனாய் தேசத் துரோகியாய்
போராடி மடிவோம்...!

உணவைப் பொங்கியே
ஓடிய நாட்கள் போதும் !
தமிழினத்தின் விடியலுக்காக
உணர்ச்சியால் பொங்குவோம்!

உணர்வை மேம்படுத்தி
உயிரையும் உரிமையும் காக்க
உறுமுகின்ற புலியாக
உலகறியப் பொங்குவோம்!

Tuesday, December 9, 2008

JOKES

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா”
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
”கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
-----------------------------------------
சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
----------------------------------------------------
என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
----------------------------------------------------
ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பாபிறந்தது. அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க.

இரண்டவதுகுழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்-சிங்”குன்னு பேர் வச்சாங்க.

ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரிகறுப்பா பிறந்தது.

அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க?

"தெரியலையே””

சம்- திங்-ராங்”குன்னு.
----------------------------------------------------------
"நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”

”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்”
----------------------------------------------------------
ஒரு காப்பி எவ்வளவு சார் ?

5 ரூபாய்.

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?

டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
------------------------------------------------------------
டாக்டர் : நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?
--------------------------------------------------------------
அப்பா 5 + 5 எவ்வளவு?

மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா?
சரி, சரி அந்தகால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.
-----------------------------------------------------------
இன்பத்திலும் சிரி,துன்பத்திலும் சிரி,சிரிச்சுக்கிட்டே இரு

அப்பதான் நீ லூசுன்னுஎல்லாரும் நம்புவாங்க………
-------------------------------------------------------------
காலிஃ பிளவரை’ தலையில் வைக்க முடியாது
எலக்ட்ரி’ சிட்டி’யில் தங்க முடியாது
கள்ளிப்’ பாலில்’ காபி போட முடியாது
கோல’ மாவில்’ பூரி போட முடியாது
கோல்டு’ பில்டரை அடகு வைக்க முடியாது - இது மாதிரிஉன்னையும் குளிக்க வைக்க முடியாது!
-குளிக்கும்போது யோசிப்போர் சங்கம்
---------------------------------------------------------
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?
Intel insideMental outside !!!
- மல்லுக்கட்டி யோசிப்போர் சங்கம்
---------------------------------------------------------
நண்பா உன் எதிர்காலம்நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால…
சீக்கிரமா தூங்கப் போடா கண்ணு!
-----------------------------------------------------------
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா???..
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !!!
----------------------------------------------------------
என்னதான் கராத்தேல பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா ஓடத்தான் செய்யணும்!

வாழை மரம்‘தார்’ போடும்
ஆனால் அதை வச்சுநம்மால‘ரோடு’ போட முடியாதே!

நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,
ஆனால், அதாலலோக்கல் கால்,எஸ்.டி. டி.கால்,ஐ.எஸ்.டி. கால் ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.
- விஞ்ஞானரீதியா யோசிப்போர் சங்கம்
-------------------------------------------------------------
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க
பஸ்ல காசுக் கொடுக்கலன்னா பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
- கஷ்டப்பட்டு யோசிப்போர் சங்கம்
--------------------------------------------------------------
டாக்டர் உங்களைச் சந்திக்கனும் நீங்க எப்ப “FREE”
எப்ப வந்தாலும் நான் “FREE” இல்ல “பீஸ்” வாங்குவேன்
---------------------------------------------------------------
அரண்மனைக்குள்ளே அடிக்கடி சரிங்சு விழுந்து காயம் பண்ணிக்கிறீங்களே மன்னா!
அதற்காக நீங்கள் கொற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு’னு பாட்டெழுதுற்தா?!
------------------------------------------------------------------
என்ன சார், நீங்க யூனிவர்சிட்டியில வேலை செய்யறதா சொன்னீங்க. ஆனா வீட்டுல சமையல் செய்துட்டிருக்கீங்க?

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு உங்களுக்கு தெரியாதா…?!
-------------------------------------------------------------------
தண்டோரா போடுபவனை மன்னர் ஏன் தண்டிக்கிறாரு?

இளவரசியை அடக்குபவருக்கு காளை பரிசு’ன்னு மாற்றிச் சொல்லிட்டானாம்!!
-------------------------------------------------------------------

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.

நீங்க கேட்டீங்களா?

இல்லை அவங்களே சொன்னங்க…
----------------------------------------------------------------------
என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போது இளிச்சவாயன்தான்.
-----------------------------------------------------------------------
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
-------------------------------------------------------------------------

Thursday, November 27, 2008

இன்று

தேச பாதுகாப்புக்காக கொண்டு வந்த பொடா சட்டத்தை சொந்த விருப்பு வெறுப்புக்காக பயன்படுத்திய ஜெயலலிதா ஒருபுறம்
தேசிய பாதுகாப்பு சட்டத்தை நேற்று கேலி கூத்தாக்கிய கருணாநிதி ஒருபுறம்
ஒரு மத்திய அமைச்சர் மகளை விடுவிக்க பத்து தீவிரவாதிகளை விடுவித்த காங்கிரஸ் கட்சியினரின் தேச பற்று ஒருபுறம்
இந்திய கடல் எல்லையை பாதுகாக்காமல் சோமாலிய கடல் கொள்ளையரை பிடிக்க கடற்படையை அனுப்பும் மத்திய அரசு
ஒருபுறம்
ஐந்து கோடி லஞ்சம் தந்து திகார் சிறையில் இருந்து பீகார் சிறைக்கு மாறி உல்லாசம் அனுபவிக்கும் பப்பு யாதவை தேர்ந்தெடுக்கும் நமது கேடுகெட்ட அரசியல் சாசனம் மறுபுறம்
ஒவ்வொரு நாளும் நமது நாட்டை உயர்வாக பேசி பேசி இன்று பிற நாட்டவரின் துக்க விசாரிப்பிற்கும் ஏளன பார்வைக்கும் ஆளாகி நிற்கும் நம் நிலையை கண்டால் நின்று விடவா என இதயம் கேட்கிறது. கண்களில் நீர் துளிர்கிறது. என் இதயம் நிறைந்த இந்தியா இன்று எங்கே செல்கிறது?

Tuesday, November 25, 2008

தினந்தோறும்....

தினந்தோறும் தீபாவளிதான்
வெடிச்சத்தமில்லாமல் விடியாதெங்கள் காலை

நரகாசுரர்களும் ராவணர்களும்
குறிபார்த்தடிப்பது சில சிறு விதைகளைதான்
அவர்களுக்குத்தெரியும் நாங்கள் விருட்சமாவோம் என

செஞ்சோலையில் வெடித்ததில் சிதறியதெல்லாம்
இளம் ரோஜாக்கள்
ஏ கடவுகளர்களே இன்னுமா அதர்மம் வேண்டும் நீங்கள்
வந்துசேர- உயிர்த்தெழ...

ஏ மா மனிதர்களே
என்றைக்கேனும் நீ்ங்கள் மரணபயத்தோடு எழுந்திருக்கிறீ்ர்களா?
உங்கள் விரல்கள் நடுங்க- போர்த்தப்பட்ட பிணக்குவியல்களில்
உறவுகளை தேடியிருக்கவாய்த்ததா?
நாங்கள் தினமும் இதைதான் செய்கிறோம்...

எங்களுக்கு விட்டுப்போவதற்கென ஓர் வரலாறு இருக்கிறது
நாளைய எனதுபிணத்தின்மீது நடந்துபோகப்போகும்
கழுகுகளே உங்களுக்கு இரண்டு வாய்ப்பு

ஒன்று இதை ஒரு சாட்சியாய் நின்று பார்த்திருப்பது
அல்லது
ஓரினம் அழிக்கப்படுவதை எதிர்த்து ஓர் குரலாவது கொடுப்து

எது செய்தாலும் சம்மதமே....

-ரிஷி