Tuesday, May 19, 2009

வாழ்க தமிழினம்



"தேடிச் சோறுநிதன் தின்று - பல சின்னச் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?"

என் பள்ளி பருவம் தொட்டு நான் என் மனதுக்குள் ரசித்த என் ஹீரோ பற்றி இன்று பல பல செய்திகள். அவை உண்மையோ பொய்யோ தெரியாது . ஆனாலும் இதை எழுதும் போது என் மனசு வலிக்கிறது. கண்களில் நீர் துளிர்க்கிறது.
இன்று சிங்கள தேசம் கொண்டாடுகிறது. சில தமிழ் பத்திரிக்கைகள் கொண்டாடுகிறது. சில தமிழ் தலைவர்களுக்கு கொண்டாட்டம். சிலருக்கு திண்டாட்டம் .இனி எதை வைத்து அரசியல் நடத்துவது என்று. இருபத்துஐந்து வருட போராட்டம் இரண்டு லட்சம் தமிழ் மக்களின் தியாகம் எல்லாம் முடிந்தது. தமிழன் என்ற இனம் உலகத்தில் உண்டு என்று உலகுக்கு சொன்னவர்கள். எத்தனை தடை இருந்த போதிலும் வான் படை கண்ட உன்னத தமிழர்கள். அகதிகளாய் சென்றாலும் சென்ற இடங்களில் எல்லாம் செல்வம் சேர்த்தவர்கள் (தமிழ் நாட்டுக்கு வந்தவர்களை தவிர). உலகம் தமிழ் அகதிகளாய் தன்னோடு அரவணைத்து கொண்டது. தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் மட்டும் முகாம்களில் அடைதது வைத்தனர். இதில் சிங்களவனுக்கு தமிழன் வழிகாட்டி .இந்த நிலைமைக்கு யார் காரணம். நிச்சயம் சிங்களவனோ இல்லை சோனியா காந்தியோ இல்லை.நாம் தான். உலகத்தில் தன் இனம் அழிக்கப் படும் போது வேடிக்கை பார்த்த இனம் தமிழ் இனம் மட்டும் தான். ரோம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அவனுக்கு அடுத்து நமது தமிழர் தலைவர் கருணாநிதி. அப்புறம் நாம் தமிழர்கள். ஒருநாள் நமது வருங்கால சந்ததியினர் கதை சொல்வார்கள் ." முன்னொரு காலத்தில் தமிழினம் என்று தமிழ்நாட்டில் இருந்தது .சிறிலங்காவிலும் இருந்தது .அப்புறம் அவர்களே சண்டை போட்டு தங்களை தாங்களே கொன்று கொண்டார்கள் ." இதையும் வேறு எதாவது மொழியில் தான் சொல்வார்கள் . ஏனெனில் அப்போது தமிழ் இருக்காது. தமிழ் இனம் இருக்காது.நாம் எல்லோரும் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயர் ஆகி விடுவோம். இந்தி படித்து இந்தியன் ஆகியிருப்போம் .ஈழத்தில் தமிழினம் அழிந்து போய் இருக்கும். என்ன செய்வது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் .மக்கள் யாரும் ஒட்டு போடாமலேயே அதிகமான வோட்டு வித்யாசத்தில் செயிக்கலாம் .இந்த நாட்டில் பிறந்ததற்காகவும் தமிழனாய் இருப்பதற்காகவும் வெட்கப்படுவதோடு வேதனைபடுவதோடு நாம் என்ன செய்ய முடியும். வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கப் வாங்குமா என்று பார்க்க வேண்டியதுதான். ஈமெயில் சாட்டில் கடலை போட வேண்டியதுதான். அப்புறம் நான் இந்து ,நீ கிறிஸ்ட் என்று சண்டை போட வேண்டியது தான் .மனசு ரொம்ப வலிக்குது. ஏனெனில் மனிதர்களை விட நமக்கு மதம்தான் முக்கியம் என்னையும் சேர்த்துதான். வாழ்க தமிழனம். வாழ்க அவர்களது சுயநலமும் துரோகமும்

0 comments: